NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹிஸ்புல்லா மீதான போரை 21 நாட்கள் நிறுத்துவதற்கான முன்மொழிவை நிராகரித்தது இஸ்ரேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹிஸ்புல்லா மீதான போரை 21 நாட்கள் நிறுத்துவதற்கான முன்மொழிவை நிராகரித்தது இஸ்ரேல்
    போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை நிராகரித்தது இஸ்ரேல்

    ஹிஸ்புல்லா மீதான போரை 21 நாட்கள் நிறுத்துவதற்கான முன்மொழிவை நிராகரித்தது இஸ்ரேல்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2024
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழனன்று (செப்டம்பர் 26) ஹிஸ்புல்லாவுடன் போர்நிறுத்தம் செய்வதற்கான முன்மொழிவுகளை நிராகரித்தார்.

    முன்னதாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல்வேறு அரபு நாடுகள் சேர்ந்து 21 நாள் இடைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், அதை நிராகரிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    அமைச்சர் காட்ஸ் இதுகுறித்து கூறுகையில், "வடக்கில் போர்நிறுத்தம் இருக்காது. ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற்று வடக்கில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குத் திரும்பும் வரை எங்கள் முழு பலத்துடன் போராடுவோம்." என்று கூறினார்.

    இதற்கிடையே, இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் லெபனானில் ஏறக்குறைய 630 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    புதன்கிழமை மேலும் 72 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் அறிவித்தது.

    போர் நிறுத்தம்

    போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள்

    சவூதி அரேபியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் முன்மொழிந்த இந்த போர்நிறுத்தம், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான இடத்தை உருவாக்குவதற்கும், பரந்த மத்திய கிழக்கு பிராந்திய மோதலின் அபாயத்தைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.

    அந்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், "இராஜதந்திரத்திற்கு இடமளிக்கும் வகையில் லெபனான்-இஸ்ரேல் எல்லையில் 21 நாள் போர்நிறுத்தத்திற்கு உடனடியாக அழைப்பு விடுக்கிறோம்." எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போதைய மோதல் சகிக்க முடியாததாக மாறியுள்ளது மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதையும் அது எடுத்துக்காட்டுகிறது.

    ஐநா சபை

    ஐநா சபையில் போர் நிறுத்தத்திற்கு லெபனான் வலியுறுத்தல்

    புதனன்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி போர்நிறுத்தத்தை வலியுறுத்தி, எல்லா ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பிரதேசங்களில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு உத்தரவாதம் அளிக்குமாறு சபையை வலியுறுத்தினார்.

    பிராந்தியத்தில் தீவிரத்தை குறைக்க வலியுறுத்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ஒரு முழுமையான போர் சாத்தியம் என்று எச்சரித்தார்.

    ஆனால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையிலான போர்நிறுத்தம் முழு பிராந்தியத்தையும் அடிப்படையில் மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    இதற்கிடையே, வெள்ளிக்கிழமை ஐநா சபையில் பேசவிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் நிறுத்த முன்மொழிவிற்கு தான் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும், தொடர்ந்து சண்டையிடுமாறு ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர்
    லெபனான்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இஸ்ரேல்

    இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ரஃபா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இடம்பெயர்ந்தோர் கூடாரங்கள் தாக்கப்பட்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ரஃபா தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்ததாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா  அமெரிக்கா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    தரைத் தாக்குதலை முன்னிட்டு 1 லட்சம் பேரை ரஃபாவிலிருந்து வெளியேற்றுகிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் இஸ்ரேல்
    ஈரான் கைப்பற்றிய இஸ்ரேல் கப்பலில் இருந்து 5 இந்திய மாலுமிகள் விடுவிக்கப்பட்டனர் ஈரான்
    ரஃபாவில் கொல்லப்பட்டார் இந்தியாவை சேர்ந்த ஐநா ஊழியர்: இஸ்ரேல் நடத்துவது இனப்படுகொலை இல்லை என்கிறது அமெரிக்கா  இந்தியா

    போர்

    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    அல்-ஷிஃபா மருத்துவமனையை கைப்பற்றியது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஹமாஸ்
    வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்தது இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்

    லெபனான்

    லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போரில் புதிய அணி உருவாவது இஸ்ரேல் கையில் உள்ளது- ஈரான் எச்சரிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    லெபனான்: இஸ்ரேலில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் கொல்லப்பட்ட ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர் இஸ்ரேல்
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025