NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள்: 48 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள்: 48 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

    புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள்: 48 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 02, 2024
    03:17 pm

    செய்தி முன்னோட்டம்

    2024 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று ஜப்பானில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்களால் குறைந்தது 48 பேர் உயிரிழந்தனர்.

    நேற்று முதல் ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

    7.6 ரிக்டர் அளவுடன் ஆரம்பித்த இந்த தொடர் நிலநடுக்கங்களில் 6க்கும் அதிகமான பெரும் நிலநடுக்கங்களும் அடங்கும்.

    ஆரம்ப நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கைகளை விடுத்தனர்.

    அதன் பிறகு, 5 அடி உயர அலைகள் ஜப்பானை தாக்கியது.

    மேலும், இந்த பேரழிவால் ஏறக்குறைய 33,000 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன.

    முக்கிய நெடுஞ்சாலைகள் உட்பட நாடு முழுவதும் பல முக்கிய வழித்தடங்கள் செயல்படவில்லை. இதனால் மருத்துவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் மீட்பு சேவைகளில் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

    ஜட்ட்வ்க்ன்

    சேதமடைந்த சாலைகள் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் பாதிப்பு 

    பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள வாஜிமா நகரில்48 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    தேசிய போலீஸ் ஏஜென்சி ஆறு பேர் இறந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.

    நிலநடுக்கங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான ஜப்பானின் நோட்டோ தீபகற்பத்திற்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

    ஆனால், சேதமடைந்த மற்றும் தடைசெய்யப்பட்ட சாலைகள் காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன

    ஓடுபாதையில் விரிசல் விழுந்ததால் அப்பகுதியின் விமான நிலையங்களில் ஒன்று மூடப்பட்டுள்ளது.

    நான்கு அதிவேக நெடுஞ்சாலைகள், இரண்டு அதிவேக ரயில் சேவைகள், 34 உள்ளூர் ரயில் பாதைகள் மற்றும் 16 படகுப் பாதைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானின் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

    அடுத்து வரும் நாட்களில் மேலும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படலாம் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    நிலநடுக்கம்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    ஜப்பான்

    ஜப்பானின் 6 நிறுவனங்களோடு தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்  தமிழ்நாடு
    இந்தியாவின் UPI சேவையால் அசந்து போன ஜப்பான் அமைச்சர் இந்தியா
    வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார்  தமிழ்நாடு
    செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்! சூரியன்

    நிலநடுக்கம்

    அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை  அமெரிக்கா
    ஜெய்ப்பூர்: அரை மணிநேரத்தில் தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள் ராஜஸ்தான்
    ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஜம்மு காஷ்மீர்
    மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி ஆப்பிரிக்கா

    உலகம்

    பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும்: ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்கா
    உலகில் மக்கள் வாழ விலையுயர்ந்த நகரங்கள் எவை? சிங்கப்பூர்
    '8-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்': ரஷ்ய பெண்களிடம் அதிபர் புதின் வலியுறுத்தல் ரஷ்யா
    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது  அமெரிக்கா

    உலக செய்திகள்

    மின்சாரம், எரிபொருள் இல்லாததால் உயிரிழந்த 179 பேர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டனர்: காசாவில் பரிதாபம்  காசா
    2023ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை நீரஜ் சோப்ரா
    பாரிஸைத் தொடர்ந்து ஹாங்காங்கிலும் மூட்டைப்பூச்சி தொல்லை: பூச்சி கொல்லி விற்பனை 172 மடங்கு அதிகரிப்பு  உலகம்
    'ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு கீழ் சீனாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன': ஜோ பைடன்  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025