நிலநடுக்கம்: செய்தி
கராச்சியில் 4 நாட்களில் 26 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன
கடந்த நான்கு நாட்களில் கராச்சியில் 26 சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
கிரீஸில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கிரேக்க தீவான கிரீட் அருகே வியாழக்கிழமை அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி இயக்கவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், டெல்லியிலும் உணரப்பட்ட அதிர்வு
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் புதன்கிழமை அதிகாலை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மர் நிலநடுக்க நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மரில் நிவாரண பணிகளான ஆபரேஷன் பிரம்மாவை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படையின் C-130J விமானம் ஜிபிஎஸ்-ஸ்பூஃபிங் (GPS spoofing) தாக்குதலை எதிர்கொண்டதாக செய்திகள் தெரிவித்தன.
இந்தியாவை ஒட்டியுள்ள அண்டை நாடுகளில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்
இந்தியாவை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
3 லட்சம் மக்களின் இறப்பு காரணமாகப் போகும் மெகா நிலநடுக்கம்; ஜப்பான் பகீர் ரிப்போர்ட்
ஜப்பான் அரசாங்கம் அதன் பசிபிக் கடற்கரையில் ரிக்டர் 9 அளவிற்கு மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மியான்மர் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 2,000ஐ தாண்டியது; ஒருவாரம் தேசிய துக்கம் அனுசரிப்பு
வெள்ளிக்கிழமை (மார்ச் 28) அன்று மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவால் கட்டப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரம்: 7 நாள் காலக்கெடு விதித்த தாய்லாந்து
தாய்லாந்தின் உள்துறை அமைச்சர் அனுடின் சார்ன்விரகுல், சமீபத்தில் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த ஒரு வானளாவிய கட்டிடம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 700 பேர் உயிரிழந்த சோகம்
மியான்மரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக மியான்மர் முஸ்லிம் அமைப்பு தெரிவித்துள்ளது.
மியான்மர் நிலநடுக்கத்தில் தொடரும் மீட்பு பணி, இறப்பு 2,000 ஐ நெருங்குகிறது
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பசிபிக் தீவு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு
டோங்காவில் 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து, சனிக்கிழமையன்று (மார்ச் 29) அந்நாட்டில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கியது இந்தியா; மியான்மர் நிலநடுக்கத்தில் மீட்பு பணிகளுக்கு உதவிக்கரம்
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்று பரவலான அழிவை ஏற்படுத்திய நிலையில், மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா ஆபரேஷன் பிரம்மாவைத் தொடங்கியது.
மியான்மரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1,000க்கும் மேல் உயர்வு
மியான்மரில் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) 7.7 ரிக்டர் அளவிலான பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தில் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 2,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அந்நாட்டின் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.
தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிப்பா? இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண்கள் தூதராகத்தால் வெளியீடு
வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தாய்லாந்து மற்றும் மியான்மரை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்
மியான்மரைத் தாக்கி தாய்லாந்து தலைநகரில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாய்லாந்தின் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
மியான்மர்-இந்தியா எல்லைப் பகுதியில் புதன்கிழமை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பீகாரிலும் உணரப்பட்ட அதிர்வுகள்
நேபாளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அசாமில் அதிகாலையில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அசாமின் மோரிகானில் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் உறுதிப்படுத்தியது.
வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; கொல்கத்தா மற்றும் பிற இடங்களில் உணரப்பட்டது
செவ்வாய்க்கிழமை காலை வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் கொல்கத்தா மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டது.
டெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் மட்டுமே நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், அது ஏன் வலுவாக உணரப்பட்டது?
பிப்ரவரி 17 திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் (NCR) வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
டெல்லியைத் தொடர்ந்து பீகாரிலும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு
தலைநகர் டெல்லியை தொடர்ந்து, பீஹாரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் நிலநடுக்கம்: 4.0 ரிக்டர் அளவாக பதிவு, பின்னதிர்வுகள் ஏற்படும் என எச்சரிக்கை
திங்கள்கிழமை அதிகாலை தேசிய தலைநகர் டெல்லியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குலுங்கியது ஜப்பான்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் திங்கட்கிழமை (ஜனவரி 13) மாலை 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திபெத்தில் ஏற்பட்ட 6 நிலநடுக்கங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 126 ஆக உயர்வு
நேபாளம்- திபெத் எல்லையில் நேற்று சக்திவாய்ந்த 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உட்பட ஆறு நிலநடுக்கங்கள் தாக்கின.
திபெத்தில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழப்பு
செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரத்தில் திபெத்தை உலுக்கிய ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவுள்ள சக்திவாய்ந்த ஆறு நிலநடுக்கங்கள் உட்பட குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திபெத்தை பலமுறை தாக்கிய நிலநடுக்கம்; டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்ட அதிர்வு
திபெத்தில் இன்று காலை 7.1 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பல அதிர்வுகளும் ஏற்பட்டது.
தெலுங்கானாவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; ஹைதராபாத்திலும் உணரப்பட்டது
தெலுங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 5.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஹைதராபாத்திலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரத்தில் இரண்டாவது முறையாக டெல்லி-என்சிஆர் பகுதியில் நிலநடுக்கம்!
பாகிஸ்தானில் புதன்கிழமை ஏற்பட்ட 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு டெல்லி மற்றும் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நடுக்கம் உணரப்பட்டது.
நிலவின் தென் துருவத்தில் சாத்தியமான நிலநடுக்கங்களைக் கண்டறிந்த சந்திரயான்-3
சந்திரனின் தென் துருவப் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட நில அதிர்வு சமிக்ஞைகளைக் கண்டறிந்து, இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது.
7.0 ரிக்டர் அளவு; ரஷ்யாவை உலுக்கியது சக்திவாய்ந்த நிலநடுக்கம்; எரிமலை வெடிப்பு
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) அதிகாலை ரஷ்யாவின் கிழக்குக் கடற்கரையில் ஒரு பெரிய கடற்படைத் தளத்திற்கு அருகில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை வெளியீடு
ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) 6.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 7.1 ரிக்டர் அளவில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தைவான்: ஹுவாலினை தாக்கிய தொடர் அதிர்வுகள், தைபேயில் உணரப்பட்ட நிலநடுக்கம்
தைவானின் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணமான ஹுவாலியனில் திங்கள்கிழமை பிற்பகுதியிலும், செவ்வாய்கிழமை அதிகாலையிலும் டஜன் கணக்கான பின்அதிர்வுகள் உணரப்பட்டது.
கிழக்கு இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
240 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நிலநடுக்கம்
வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களைத் தாக்கிய 4.8 ரிக்டர் அளவிலான அரிய நிலநடுக்கம், 240 ஆண்டுகளுக்கும் பின்னர் பதிவான வலுவான நிலநடுக்கம் ஆகும்.
தைவான் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
ஜப்பானின் ஃபுகுஷிமா பிராந்தியத்தில் உள்ள ஹோன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் யோனகுனி தீவில் இன்று காலை, (மார்ச் 3), 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவு
கடந்த வாரம் பல பயங்கரமான நிலநடுக்கங்கள் ஜப்பானில் ஏற்பட்டு மக்களை பீதியடைய செய்திருந்த நிலையில், இன்று மத்திய ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவுள்ள மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஜப்பான் நிலநடுக்கம்: 84 ஆக உயர்ந்த உயிரிழப்பு
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 7.5 ரிக்டராகப் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.
புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 155 நிலநடுக்கங்கள்: 48 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
2024 ஆம் ஆண்டின் முதல் நாளான நேற்று ஜப்பானில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்களால் குறைந்தது 48 பேர் உயிரிழந்தனர்.
சுனாமி எச்சரிக்கை: அவசர எண்களை அறிவித்தது ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம்
ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை அடுத்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
வீடியோ: ஜப்பான் நகரத்தை தாக்கியது இந்த ஆண்டின் முதல் சுனாமி
ஜப்பானில் இன்று 7.5 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பான் நிலநடுக்கங்கள்: 33,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு; வடகொரியா, ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
மத்திய ஜப்பானில் தொடர்ச்சியான பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 33,500 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றன.
7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை
வட-மத்திய ஜப்பானில் இன்று ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் பப்புவா பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியான பப்புவாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதனால் கடுமையான சேதமோ உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
கூகுளின் நிலநடுக்கம் குறித்த எச்சரிக்கை வழங்கும் வசதியைப் பயன்படுத்துவது எப்படி?
நிலநடுக்கம் ஏற்படுவது குறித்து எச்சரிக்கை செய்யும் புதிய ஆண்ட்ராய்டு வசதி ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகப்படுத்தியிருந்தது கூகுள். இந்த வசதி தற்போது ஆண்ட்ராய்டு 5 இயங்குதளத்திற்கு மேற்பட்ட இயங்குதளத்தைக் கொண்ட அனைத்து போன்களிலும் இடம் பெற்றிருக்கிறது.