LOADING...
பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

எழுதியவர் Venkatalakshmi V
Oct 10, 2025
08:20 am

செய்தி முன்னோட்டம்

பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கடலோரப் பகுதிகளுக்கு மக்கள் வெளியேற்றம் குறித்து ஆலோசனைகளும் விடுக்கப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் வோல்கானாலஜி மற்றும் சீஸ்மோலாஜி (Phivolcs) மிண்டனாவோவின் தாவோ ஓரியண்டலில் உள்ள மனே நகருக்கு அருகில் 10 கிமீ ஆழத்தில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறியது.

விவரங்கள்

சுனாமி எச்சரிக்கை இருப்பதால் பொதுமக்கள் உயரமான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தல்

சாத்தியமான சேதம் மற்றும் பின்அதிர்வுகள் குறித்து நிறுவனம் எச்சரித்தது. மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையாக உயரமான பகுதிகளுக்கு அல்லது உள்நாட்டிற்குச் செல்லுமாறு பிவோல்க்ஸ் வலியுறுத்தியுள்ளது. உயிரிழப்புகள் அல்லது சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post