NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஜப்பான் நிலநடுக்கம்: 84 ஆக உயர்ந்த உயிரிழப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜப்பான் நிலநடுக்கம்: 84 ஆக உயர்ந்த உயிரிழப்பு

    ஜப்பான் நிலநடுக்கம்: 84 ஆக உயர்ந்த உயிரிழப்பு

    எழுதியவர் Srinath r
    Jan 04, 2024
    06:58 pm

    செய்தி முன்னோட்டம்

    புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் 7.5 ரிக்டராகப் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

    72 மணி நேரத்திற்குப் பிறகு, இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறையும் என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    ஜப்பானின் இஷிகாவா தீவிற்கு அருகில் கடற்பகுதியில், 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் வரை பலமுறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விளக்கிக் கொள்ளப்பட்டது.

    கடந்த 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தில், தற்போது வரை 84 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

    2nd card

    வாஜிமா நகரத்தில் அதிக உயிரிழப்புகள் பதிவு

    நிலநடுக்கத்தில் இஷிகாவா மாகாணம் அதிக பாதிப்பை எதிர்கொண்டது. இறந்தவர்கள் அனைவரும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    48 பேர் வாஜிமா நகரிலும், 23 பேர் சுஸு நகரிலும் உயிரிழந்துள்ளதாக இஷிகாவா அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மற்ற 13 உயிரிழப்புகள் ஐந்து அண்டை நகரங்களில் பதிவாகியுள்ளன. 330க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், அதில் குறைந்தது 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த நிலநடுக்கத்தால் 51 நபர்கள் மாயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    3rd card

    மீட்பு பணியில் 4,000 வீரர்கள்

    ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா முதலில் அனுப்பப்பட்ட 1,000 வீரர்கள் உடன், கூடுதலாக 3,000 வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 34,000 பேருக்கு, தேவையான உணவு மற்றும் உபகரணங்கள் வழங்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

    இடிபாடுகளில் சிக்கிய 150 இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

    தொடர் மழைப்பொழிவு மற்றும் பனிபொழிவால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    நிலநடுக்கத்தால் நிலச்சரிவு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. இது மீட்பு பணிகளை மேலும் கடினமாகியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    நிலநடுக்கம்
    பிரதமர்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    ஜப்பான்

    ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான் ஸ்மார்ட்போன்
    ஜப்பான் புகுஷிமா அணுமின்நிலைய கழிவுநீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி; சீனா எதிர்ப்பு சீனா
    'உலக எமோஜி தினம்' ஒன்று கொண்டாடப்படுவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகம்
    பிபா மகளிர் உலகக்கோப்பை : 4-0 கோல்கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான் கால்பந்து

    நிலநடுக்கம்

    ஜம்மு காஷ்மீர்: குல்மார்க்கில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்  ஜம்மு காஷ்மீர்
    மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 296 பேர் பலி ஆப்பிரிக்கா
    மொராக்கோ பூகம்பம்: பலி எண்ணிக்கை 820ஆக உயர்வு  ஆப்பிரிக்கா
    மொராக்கோ நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஆப்பிரிக்கா

    பிரதமர்

    "கனடா விசாரணையை முடிக்க இந்தியா ஆதாரம் கேட்கிறது" - கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா கனடா
    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    ராகுலுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை; பிரணாப் முகர்ஜியின் மகள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பரபரப்பு ராகுல் காந்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025