NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மாலத்தீவு அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மாலத்தீவு அரசு
    இந்தியாவையும், இந்திய பிரதமரையும் அவமதித்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்ட மாலத்தீவு அமைச்சர்கள் pc: இந்தியாடுடே

    இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மாலத்தீவு அரசு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 08, 2024
    08:09 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததற்காக மாலத்தீவு அரசு, தனது அமைச்சர்கள் 3 பேரை இடைநீக்கம் செய்துள்ளது.

    பிரதமர் மோடியின் சமீபத்திய லட்சத்தீவு பயணத்தை கேலி செய்து மாலத்தீவு அமைச்சர் ஒருவர் எக்ஸ் தளத்தில் கேலியாக கருத்து தெரிவித்ததையடுத்து சர்ச்சை வெடித்தது.

    தற்போது நீக்கப்பட்ட அந்த ட்வீட்களில், மாலத்தீவு அமைச்சர் மரியம் ஷியூனா, பிரதமர் மோடியை,"கோமாளி" என்றும் "இஸ்ரேலின் கைப்பாவை" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து, பல மாலத்தீவு அமைச்சர்கள், இந்திய கடற்கரைகள், மாலத்தீவுகளால் பராமரிக்கப்படும் தூய்மைத் தரத்தை விட மிகவும் குறைவாக இருப்பதாகக் கூறியதை அடுத்து நிலைமை மேலும் மோசமடைந்தது.

    உள்ளூர் ஊடகங்களின்படி, தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் ஷியுனா, மல்ஷா மற்றும் ஹசன் ஜிஹான் ஆகியோர் ஆவர்.

    card 2

    ரத்து செய்யப்பட்ட 8000 ஹோட்டல் முன்பதிவுகள், 2,500 விமான டிக்கெட்டுகள்

    முன்னதாக மாலத்தீவு அரசாங்கம், இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக அந்நாட்டு அமைச்சர் கூறிய இழிவான கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் கூறியது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என்றும், அது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் கூறியது.

    எனினும், கண்டனங்கள் வலுத்த நிலையில் இம்மூன்று அமைச்சர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இதுபற்றி வெளியான அறிக்கையில், "அரசுப் பதவிகளில் இருந்தபோது சமூக ஊடகங்களில் இதுபோன்ற பதிவுகளை செய்தவர்கள் இப்போது வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்" என்று மாலத்தீவு அரசாங்கம், இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடாமல் தெரிவித்துள்ளது.

    இதனிடையே பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்ததாக அறிவித்தனர்.

    தொடர்ந்து, 8,000 ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் மாலத்தீவுக்கான 2,500 விமான டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நரேந்திர மோடி
    பிரதமர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    நரேந்திர மோடி

    40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் மோடி இந்தியா
    செப்டம்பர் 8ஆம் தேதி நடக்கிறது மோடி-பைடனுக்கு இடையிலான  இருதரப்பு சந்திப்பு இந்தியா
    இந்தியாவின் பெயரை 'பாரதம்' என்று மாற்ற பாஜக அரசு நடவடிக்கை  இந்தியா
    50 ஆண்டு வளர்ச்சியை ஆறு ஆண்டுகளில் எட்டிய இந்தியா; உலக வங்கி பாராட்டு இந்தியா

    பிரதமர்

    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    ராகுலுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை; பிரணாப் முகர்ஜியின் மகள் வெளியிட்டுள்ள புத்தகத்தில் பரபரப்பு ராகுல் காந்தி
    ஜம்மு காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம் நாடாளுமன்றம்

    பிரதமர் மோடி

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  காங்கிரஸ்
    பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி இந்தியா
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர்
    மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025