NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்: சீறி எழும் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்: சீறி எழும் இந்தியா

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்: சீறி எழும் இந்தியா

    எழுதியவர் Sindhuja SM
    Jan 07, 2024
    03:57 pm

    செய்தி முன்னோட்டம்

    மாலத்தீவு நாட்டின் அமைச்சர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    மாலத்தீவின் 'இளைஞர் அதிகாரமளித்தல்' துணை அமைச்சர் மரியம் ஷியுனா, ஒரு ட்விட்டர் பதிவில், பிரதமர் நரேந்திர மோடியை "கோமாளி" என்றும், "பொம்மலாட்ட பொம்மை" என்றும் அழைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதன் பிறகு, அவர் அந்த ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர் மோடி தனது லட்சத்தீவு பயணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களை சமீபத்தில் வெளியிட்டு, அந்த தீவை இந்தியர்களுக்கான சுற்றுலா தலமாக அறிவித்தார்.

    அந்த பதிவு குறித்து பேசிய துணை அமைச்சர் மரியம் ஷியுனா, லட்சத்தீவையும் மாலத்தீவையும் ஒப்பிட்டு பேசி பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசி இருந்தார்.

    பிட்ஜ்வ்க்ப்க

    லட்சத்தீவையும் பிரதமர் மோடியையும் கேலி செய்த மாலத்தீவு அதிகாரிகள் 

    அவரை தவிர, எம்.பி. ஜாஹித் ரமீஸ் உள்ளிட்ட மாலத்தீவு அதிகாரிகள், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை கேலி செய்து பதிவிட்டிருந்தனர்.

    "இந்த நடவடிக்கை சிறப்பானது. ஆனால், எங்களுடன் போட்டியிடும் எண்ணம் மாயையானது. நாங்கள் வழங்கும் சேவையை அவர்களால் எப்படி வழங்க முடியும்? அவர்கள் எப்படி சுத்தமாக வைத்திருப்பார்களோ? அறைகளில் இருந்து வரும் நாற்றம் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்." என்று ஜாஹித் ரமீஸ் கூறி இருந்தார்.

    இந்நிலையில், இணையவாசிகள் பலர் மாலத்தீவு அதிகாரிகளின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பலர் "மாலத்தீவை புறக்கணிக்க" அழைப்பு விடுத்தனர்.

    இதற்கிடையில், மாலத்தீவுக்கான இந்திய தூதர், அந்நாட்டின் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    யூகி

    இது குறித்து அறிக்கையை வெளியிட்டது மாலத்தீவு அரசாங்கம்

    இந்நிலையில், இந்த பிரச்சனை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் மாலத்தீவு அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அந்நாட்டு அமைச்சர் கூறிய இழிவான கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் கூறியது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என்றும், அது மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளது.

    "வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் தரக்குறைவான கருத்துகள் பரப்பப்படுகின்றன என்பது மாலத்தீவு அரசாங்கத்திற்கு தெரியும். ஆனால், அந்த கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை" என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் மாலத்தீவு அரசாங்கம் கூறியுள்ளது.

    மேலும், இப்படிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாலத்தீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    படகு சேவைகளை மேம்படுத்த இந்தியாவும் மாலத்தீவும் 13 MoUகளில் கையெழுத்திட்டன மாலத்தீவு
    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்

    இந்தியா

    26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதில் சிக்கல்? பாகிஸ்தான்
    இந்தியாவில் மேலும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    2024 கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு டி.குகேஷ் மற்றும் கே.ஹம்பி தகுதி செஸ் போட்டி
    கப்பல்கள் தாக்கப்பட்டதை தொடர்ந்து அரபிக்கடலில் கண்காணிப்பை அதிகரித்தது இந்திய கடற்படை கடற்படை

    பிரதமர் மோடி

    கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் திரிணாமுல் காங்கிரஸ்
    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  காங்கிரஸ்
    பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை - பெருமிதம் கொள்ளும் பிரதமர் மோடி இந்தியா
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025