Page Loader
வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல் 

வடக்கு காசாவில் இருந்த ஹமாஸ் இராணுவக் கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக அறிவித்தது இஸ்ரேல் 

எழுதியவர் Sindhuja SM
Jan 07, 2024
12:41 pm

செய்தி முன்னோட்டம்

வடக்கு காசா பகுதியில் உள்ள ஹமாஸின் இராணுவ கட்டமைப்பு தகர்க்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, மத்திய மற்றும் தெற்கு காசாவில் உள்ள பாலஸ்தீன பயங்கரவாதக் குழுவை அகற்றுவதில் கவனம் செலுத்தி வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். "இதுவரை நடந்த சண்டையிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் நாங்கள்(இஸ்ரேல்) இதை வித்தியாசமாகவும் முழுமையாகவும் செய்வோம்" என்று அவர் ஒப்புக்கொண்டார். மேலும், ஜபாலியா பகுதியில் உள்ள ஹமாஸின் பட்டாலியன் தளபதி, துணைப் படைத் தளபதிகள் மற்றும் 11 நிறுவனத் தளபதிகளை இஸ்ரேல் அகற்றியது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

ட்ஜ்வ்க்ன்

ஜபாலியா பகுதியில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றம் 

"அப் பகுதியில் நாங்கள் அழித்த மூத்த பயங்கரவாதியின் பெயர் அஹ்மத் ராண்டோர் ஆகும். தளபதிகளை ஒழித்தவுடன் ஒரு கட்டமைப்புடன் சண்டையிட முடியாமல் பயங்கரவாதிகள் பலர் சரணடைந்தனர்" என்று ஹகாரியை மேற்கோள்காட்டி இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள்(IDF) தெரிவித்துள்ளது. மக்கள் அதிகமாக வாழும் பகுதியான ஜபாலியாவிற்குள் நுழைவதற்கு முன்பு, பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும், இஸ்ரேலிய இராணுவம் உள்ளூர் மக்களை வெளியேற்றியது என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அப்பகுதியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில், அதாவது, கமால் அத்வான் மற்றும் இந்தோனேசிய மருத்துவமனைகளில் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த பயங்கரவாத உள்கட்டமைப்பை அகற்ற இஸ்ரேலிய துருப்புக்கள் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.