NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தென் கொரியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தென் கொரியா

    நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தென் கொரியா

    எழுதியவர் Sindhuja SM
    Jan 09, 2024
    02:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தென் கொரியாவின் நாடாளுமன்றம் செவ்வாயன்று நாய் இறைச்சித் தொழிலை சட்டவிரோதமாக்குவதற்கான முக்கிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.

    சர்வதேச கௌரவம் மற்றும் விலங்கு உரிமைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் கோபமடைந்த நாய் பண்ணையாளர்கள், அரசியலமைப்பு முறையீட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், எதிர்ப்புப் பேரணிகளைத் தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

    எனவே, இந்த தடை மீதான சூடான விவாதம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பல நூற்றாண்டுகளாக கொரிய தீபகற்பத்தில் வாழும் மக்கள் உண்ணும் நாய் இறைச்சிகள், தென் கொரியாவில் வெளிப்படையாக தடை செய்யப்பட்டதும் இல்லை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதும் இல்லை.

    டவ்ல்க்க்

    நாய் இறைச்சியை விற்றால் சுமார் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை 

    தற்போது பெரும்பான்மையான தென் கொரிய மக்கள் நாய் இறைச்சியை உண்பதில்லை என்றும், பெரும்பாலான தென் கொரியர்கள் நாய் இறைச்சியை தடை செய்வதற்கு ஆதரவாக இருக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன.

    ஆனால், தென் கொரியர்களில் மூன்றில் ஒருவர் நாய் இறைச்சியை உண்பதில்லை என்றாலும் அவர்கள் நாய் இறைச்சியை தடை செய்யவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    செவ்வாயன்று, தென் கொரிய தேசிய சட்டமன்றம் 208-0 வாக்குகள் வித்தியாசத்தில் நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது.

    நாய் இறைச்சிக்காக நாயை படுகொலை செய்தல், இனப்பெருக்கம் செய்தல், வியாபாரம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றை இந்த மசோதா 2027ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக்கும். இதுபோன்ற செயல்களுக்கு சுமார் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென் கொரியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தென் கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் உலகம்

    உலகம்

    2024-ல் என்ன நடக்கும்? பாபா வாங்காவின் கருத்துக்கணிப்பு கூறுவது இதுதான் வாழ்க்கை
    காசா போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு: ஐநா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா அமெரிக்கா
    ஹமாஸூக்கு எதிராக போரைத் தொடரும் முடிவில் இஸ்ரேல் இஸ்ரேல்
    அந்நிய முதலீட்டுக் கட்டணத்தை மும்மடங்கு வரை உயர்த்தும் ஆஸ்திரேலிய அரசு ஆஸ்திரேலியா

    உலக செய்திகள்

    இந்திய தூதரை வழி மறித்து தகராறு செய்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்: நியூயார்க்கில் பரபரப்பு  அமெரிக்கா
    புகையிலை தடையை ரத்து செய்ய முடிவு: புதிய நியூசிலாந்து அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு  நியூசிலாந்து
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் 11 பிணயக்கைதிகள் விடுவிப்பு இஸ்ரேல்
    இங்கிலாந்தில் மனிதர்களுக்கு பரவ தொடங்கியது H1N2 வைரஸ் பிரிட்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025