NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சோமாலியாவில் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்: காப்பாற்ற விரையும் ஐஎன்எஸ் சென்னை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சோமாலியாவில் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்: காப்பாற்ற விரையும் ஐஎன்எஸ் சென்னை

    சோமாலியாவில் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட சரக்குக் கப்பல்: காப்பாற்ற விரையும் ஐஎன்எஸ் சென்னை

    எழுதியவர் Srinath r
    Jan 05, 2024
    02:16 pm

    செய்தி முன்னோட்டம்

    சோமாலியா கடற்கரை அருகே நேற்று மாலை 'எம்வி லிலா நார்ஃபோல்க்' என்ற சரக்குக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. கடத்தப்பட்ட கப்பலில் 15 இந்தியர்கள் இருந்தனர்.

    கடத்தப்பட்ட கப்பலை கண்காணிக்க சோமாலிய கடற்கரையை நோக்கி, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் விரைந்துள்ளது.

    கப்பல் கடத்தப்பட்டதாக நேற்று மாலை இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், கப்பலில் உள்ளவர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மேலும், கடத்தப்பட்ட கப்பலின் நகர்வுகளை கண்காணிப்பதற்காக இந்திய கடற்படை விமானங்கள் பணியமடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    கப்பலில் 5-6 ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் இருக்கலாம்

    கடத்தப்பட்ட கப்பலில் 5-6 ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் இருக்கலாம் என்பதை உணர்த்தும் வகையில், கடத்தப்பட்ட கப்பல் UKMTO (யுனைடெட் கிங்டம் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள்) இணைய முகப்பிற்கு(Portal) தகவல் அனுப்பியதாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கடத்தல் தொடர்பான விவரங்கள் மற்றும் கப்பல் யாரால் கடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்கள், தற்போது வரை வெளியிடப்படவில்லை.

    மால்டிஸ்-கொடி கட்டிய வணிக கப்பல் அரபிக் கடல் பகுதியில் கடத்தப்பட்ட சில நாட்களுக்கு பின்னர், மற்றும் ஒரு கப்பல் சோமாலியாவில் கடத்தப்பட்டுள்ளது.

    கப்பலில் கடற்கொள்ளையர்கள் தாக்கியதால் காயம் அடைந்த ஒரு பல்கேரிய நாட்டவரை இந்திய கடற்படை மீட்ட நிலையில், கப்பல் மாலுமியை ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பல் மீட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்திய ராணுவம்
    இந்தியர்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இந்திய ராணுவம்

    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்தியா
    லடாக் பிரச்னையை சீக்கிரம் சரிசெய்ய இந்தியா-சீனா ஒப்புக்கொண்டது: பெய்ஜிங்  இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் காயம்  இந்தியா
    மணிப்பூரில் வன்முறை: மாநிலம் முழுவதும் இராணுவ பாதுகாப்பு இந்தியா

    இந்தியர்கள்

    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் இந்தியா
    இந்திய மாணவர்களுக்கு 1.4 லட்சம் விசாக்களை வழங்கி அமெரிக்க தூதரகம் சாதனை அமெரிக்கா
    கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜார் கொல்லப்படுவதற்கு முன்பே அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்திருந்த விஷயங்கள் என்ன? அமெரிக்கா
    ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா? இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025