NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி 

    கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 02, 2024
    05:24 pm

    செய்தி முன்னோட்டம்

    டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இன்று ஒரு ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

    ஏர்பஸ் விமானத்தில் இருந்த 367 பயணிகளும் 12 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

    கொல்லப்பட்ட 5 பேரும் கடலோர காவல்படை விமானத்தில் இருந்தவர்கள் ஆவர்.

    கடலோர காவல்படை விமானத்தில் இருந்த ஆறு பணியாளர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டார். ஆனால் மற்ற ஐந்து பேரும் பலியாகினர்.

    இந்த விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் பயணிகள் விமானம் கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியதாக தொலைக்காட்சி செய்திகள் கூறுகின்றன.

    மத்திய ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகளுக்கு உதவ கடலோர காவல்படை விமானம் புறப்படதிட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

     ஜஃன்சாக் 

    70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன

    ஜப்பானின் வடக்கு தீவான ஹொக்கைடோவில் உள்ள சப்போரோ விமான நிலையத்திலிருந்து அந்த விமானம் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    விபத்துக்குள்ளான பயணிகள் விமானம் ஓடுபாதையில் இறங்கியதும் டாக்ஸிவேயில் மற்ற விமானத்தை மோதி இருக்கலாம் என்று பேசப்படுகிறது.

    ஜப்பானின் நிலம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

    இந்த விபத்தை அடுத்து ஓடுபாதையில் எரியும் குப்பைகள் விழுந்து கிடப்பதால் அந்த விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    மேலும், 70க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

    பல தசாப்தங்களாக, ஜப்பானில் எந்த பெரிய விமான விபத்துகளும் ஏற்படவில்லை.

    கடைசியாக, 1985ஆம் ஆண்டில், டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குப் பறந்த JAL ஜம்போ ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 520 பயணிகள் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜப்பான்
    விமானம்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பிய ISI பயிற்சி பெற்ற 'உளவாளி' ராஜஸ்தானில் கைது ராஜஸ்தான்
    மீண்டும் விலை உயர்வை சந்தித்த தங்கம்; இன்றைய (மே 30) தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    குஜராத்தை விட சென்னையில் கல்வியறிவு அதிகம், மக்கள் பண்பானவர்கள்; ரவீந்திர ஜடேஜா புகழாரம் ரவீந்திர ஜடேஜா
    10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பாராட்டு விழா நடத்துகிறார் TVK தலைவர் விஜய் விஜய்

    ஜப்பான்

    வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்புகிறார்  தமிழ்நாடு
    செயற்கைகோள் மூலம் சூரிய ஒளி மின்சாரம்.. புதிய சோதனை முயற்சியில் ஜப்பான்! சூரியன்
    சிரிப்பை கற்றுக்கொள்வதற்கு கோச்சிங் எடுக்கும் ஜப்பானியர்கள்  உலகம்
    ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கவிருக்கும் ஜப்பான் ஸ்மார்ட்போன்

    விமானம்

    சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் விமான சேவை துவங்கியது  சென்னை
    விமானிகளின் அறைக்குள் பெண் நண்பரை அழைத்து சென்ற இரு விமானிகள் மீது நடவடிக்கை  இந்தியா
    ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ விமான சேவைகள்
    விமானத்திற்குள் 'ஹைஜாக்' செய்வது பற்றி பேசிய பயணி கைது  மும்பை

    உலகம்

    அமெரிக்கா: இந்திய மாணவரை அடிமையாக்கி வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்திய 3 பேர் கைது  அமெரிக்கா
    'ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதால் தான் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்தது': பிளிங்கன் இஸ்ரேல்
    கணினி அறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'உலக கணினி அறிவு தினம்' இன்று  கேட்ஜட்ஸ்
    பழமையான பைசா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல் இத்தாலி

    உலக செய்திகள்

    'ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்கு கீழ் சீனாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளன': ஜோ பைடன்  அமெரிக்கா
    இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் அதிரடி இந்தியா
    '5 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல': இஸ்ரேல்  இஸ்ரேல்
    பாலஸ்தீனத்திற்கு இரண்டாவது முறையாக நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா  பாலஸ்தீனம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025