இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா எம்பிக்கு கத்தி குத்து
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த எம்.பி., கோத்தா பிரபாகர் ரெட்டி கத்தியால் குத்தப்பட்டார்.
'முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பு': மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
சமீபத்தில் குஜராத்தில் நடந்த நவராத்திரி கொண்டாட்டத்தின் போது 10 பேர் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்தனர்.
சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சலில் மாணவி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திடீரென்று பற்றி எரிந்த 40க்கும் மேற்பட்ட பேருந்துகள்: பெங்களூரில் பரபரப்பு
பெங்களூருவில் உள்ள வீர்பத்ரா நகர் அருகே இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'டிஸ்லெக்ஸியா' விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிவப்பு விளக்குகளால் மிளிர்ந்த குடியரசு தலைவர் மாளிகை
டெல்லி: டிஸ்லெக்ஸியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குடியரசு தலைவர் மாளிகை மற்றும் நாடு முழுவதும் உள்ள பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கட்டிடங்களில் நேற்று(அக் 29 )மாலை சிவப்பு நிறத்தில் விளக்கேற்றப்பட்டன.
சிவப்பு சிக்னலை கவனிக்காமல் சென்றதால் தான் ஆந்திர ரயில் விபத்து ஏற்பட்டது
ஆந்திர பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்ட ரயில் விபத்துக்கு ரயில் டிரைவரின் கவனக்குறைவே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர்
செவ்வாய் கிரகத்தில் இயங்கும் முதல் ஹெலிகாப்டரை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்காக இந்தியர் உருவாக்கியுள்ளார்.
மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(அக் 30) தள்ளுபடி செய்தது.
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
மதுரையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜையை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
'பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது': வெளியுறவுத்துறை அமைச்சர்
பயங்கரவாதத்தால் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அதனால் தான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம்
கேரளாவில், நேற்று காலை, ஒரு சமய கூட்டத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில், இன்று பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. அதில் 12 வயது சிறுமியும் ஒருவர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆந்திரா ரயில் விபத்து: 13 பேர் மரணம், 40க்கும் மேற்பட்டோர் காயம் எனத்தகவல்
நேற்று மாலை, ஆந்திரா அருகே, ஹவுரா-சென்னை வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்று, சிக்னல்-ஐ கவனிக்காமல் சென்றதில், அதே தடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பயணிகள் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
'தேச விரோத செயலில் சபை ஈடுபட்டது': கேரள தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்
கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் இன்று காலை நடந்த ஒரு கிறிஸ்தவ குழுவின் வழிபாட்டு கூட்டத்தில் திடீரென்று 3 குண்டுகள் வெடித்தன.
சரணடைந்த டொமினிக் மார்ட்டின் தான் கேரள தொடர் குண்டுவெடிப்புக்கு காரணம்- காவலர்கள் உறுதி
கேரளாவில் இன்று காலை ஒரு கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு சரணடைந்த நபர் தான் காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டம் பேசுவோம்: தற்கொலையை குற்றமற்றதாக்குகிறதா புதிய குற்றவியல் மசோதாக்கள்?
ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் நமது NewsBytesயில் வெளியாகும் சட்டம் பேசுவோம் கட்டுரையை படித்து, இந்திய சட்டங்கள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
க்ரைம் ஸ்டோரி: பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டெலிவரி ஏஜென்ட்- டெல்லி அருகே கொடூரம்
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மளிகைப் பொருட்களை டெலிவரி செய்ய சென்றவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(அக் 28) 35ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 34ஆக பதிவாகியுள்ளது.
கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா
கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்கள் வழங்குவதை, இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: தமிழக எல்லையோர மாவட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
இன்று காலை கேரளாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, தமிழக எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் வெடிகுண்டு தாக்குதல்: டிபன் பாக்ஸில் வெடிபொருட்கள் இருந்ததாக தகவல்
கேரளாவில் இன்று காலை ஒரு கிறிஸ்தவ மத வழிபாட்டு கூட்டத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.
கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா
இன்று காலை கேரளாவின் களமச்சேரியில் உள்ள ஒரு கிறிஸ்தவக் குழுவின் மாநாட்டு மையத்தில் ஒரு பயங்கரமான குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம்
இன்று காலை கேரளாவின் கலமசேரியில் உள்ள மாநாட்டு மையத்தில் தொடர்ந்து நடந்த 3 குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார் என்றும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இறக்கும் தருவாயிலும் பயணிகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்- ஒடிசாவில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவம்
ஒடிசாவில் ஓடும் பேருந்தில் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவரின் சாமர்த்திய செயல்பாட்டால் பேருந்தில் பயணித்த 48 நபர்களும் அதிர்ஷ்டவசமாக உயர்த்தினார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைது
கடந்த 14ஆம் தேதி கச்சத்தீவு மற்றும் தனுஷ்கோடிக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்த 27 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, வவுன்யா சிறையில் அடைத்தனர்.
இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து எகிப்து அதிபருடன் உரையாடிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் ஹமாஸ் போர் குறித்து நேற்று, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி உடன் உரையாடியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
சமீபத்தில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை
சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கொட்டி தீர்க்க போகும் கனமழை
இலங்கை மற்றும் அதை ஒட்டிய கொமோரின் பகுதியில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 0.9 கிமீ உயரத்தில் ஒரு சூறாவளி சுழற்சி நிலவுகிறது. இது தென்மேற்கு வங்காள விரிகுடா வரை நீண்டுள்ளது. இதன் காரணமாக,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி
சென்னை மாநகரில் தி.நகர் பகுதியில் பாலன் இல்லம் என்னும் தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ளது பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடம்.
பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்: குஜராத்தில் பரிதாபம்
குஜராத்தின் சூரத்தில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துகொண்டனர். சம்பவ இடத்தில் இருந்து தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கேரளாவில் பியூன் வேலைக்கு குவிந்த BE, Btech பட்டதாரிகள் - அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகம் முழுவதுமுள்ள நாடுகளிலேயே இந்தியாவில் தான் இளைஞர்கள் அதிகம் என்று செய்திகள் தெரிவிக்கிறது.
மீண்டும் உயரும் கொரோனா பாதிப்புகள்: இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம்
நேற்று(அக் 27) 26ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 35ஆக பதிவாகியுள்ளது.
சிறை நூலகங்களுக்கு புத்தகங்களை நன்கொடையாக வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017ம் ஆண்டு திமுக கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றார்.
'இஸ்ரேல் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கவில்லை என்பது வெட்கக்கேடானது': பிரியங்கா காந்தி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரை நிறுத்துவதற்கு ஐநா பொதுச் சபையில்(UNGA) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் இந்தியா விலகியிருப்பது தனக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் அளிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாத பெளர்ணமி - திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
சிவபெருமானின் அக்னி ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில்.
தீபாவளி பண்டிகை - சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியானது
இந்தாண்டு தீபாவளி பண்டிகையானது வரும் நவம்பர் 12ம்.,தேதி கொண்டாடப்படவுள்ளது.
ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்
கடந்த 25ம்.,தேதி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பானது நேற்று(அக்.,27)நடந்துள்ளது.
'சமத்துவ சமுதாயம் அமைப்பதற்கு ஒன்றிணைந்து பாடுபடுவோம்' - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடந்த ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி, நாங்குநேரி பகுதியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கையை அரிவாள் கொண்டு சக-மாணவர்கள் சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.