NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்
    பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு , அந்த 8 போரையும் மீட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடுமபத்தினர் கோரியுள்ளனர்.

    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் வெளியுறவுத்துறை அமைச்சர்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 30, 2023
    11:12 am

    செய்தி முன்னோட்டம்

    கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களின் குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், "இந்த வழக்குக்கு இந்திய அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், "அந்த குடும்பங்களின் கவலைகள் மற்றும் வலிகளை முழுமையாகப் பகிர்ந்து கொண்டேன். அவர்களின் விடுதலையைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறேன்." என்று ட்விட்டரில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.

    உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எட்டு இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு, கத்தார் நீதிமன்றம் சமீபத்தில் மரண தண்டனை விதித்தது.

    இந்த தீர்ப்பு குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய இந்திய அரசு, அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதாகக் கூறியிருந்தது.

    ட்விட்டர் அஞ்சல்

     வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் ட்விட்டர் பதிவு 

    Met this morning with the families of the 8 Indians detained in Qatar.

    Stressed that Government attaches the highest importance to the case. Fully share the concerns and pain of the families.

    Underlined that Government will continue to make all efforts to secure their release.…

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 30, 2023

    சஜிக்ப

    பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு பிரச்சனையை தீர்க்க வேண்டுகோள் 

    மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் கேப்டன்கள் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஷ்ட் மற்றும் கமாண்டர்கள் அமித் நாக்பால், பூர்ணேந்து திவாரி, சுகுணகர் பகாலா, சஞ்சீவ் குப்தா மற்றும் மாலுமி ராகேஷ் ஆகியோர் அடங்குவர்.

    இதற்கிடையில், இந்த விவாகரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு , அந்த 8 போரையும் மீட்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் குடுமபத்தினர் கோரியுள்ளனர்.

    இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்திருக்கும் கமாண்டர் பூர்ணேந்து திவாரியின் சகோதரி பார்கவா(54), "எங்களிடம் அதிக நேரம் இல்லை. நமது எட்டு வீரர்களை மீண்டும் அழைத்து வருவதற்கு தனிப்பட்ட முறையில் தலையீட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமரிடம் கேட்டுக்கொள்கிறோம்." என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கத்தார்
    எஸ்.ஜெய்சங்கர்
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    கத்தார்

    உளவு பார்த்ததாக 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் மரண தண்டனை

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா

    இந்தியா

    சட்டம் பேசுவோம்: ஒரே பாலின திருமண பிரச்சனையில் நீதி தாமதப்படுத்தப்பட்டதா மறுக்கப்பட்டதா? உச்ச நீதிமன்றம்
    பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரே நாளில் நான்கு தங்கம் வென்ற இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி
    அபுதாபி மாஸ்டர்ஸ் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் பதக்கம் வென்றது இந்தியா பேட்மிண்டன் செய்திகள்
    இந்தியாவில் வரலாறு காணாத அளவு குறைந்தது கொரோனா பாதிப்புகள் கொரோனா

    பிரதமர் மோடி

    அடுத்தாண்டு ஜனவரி 26க்குள் அயோத்தி ராமர் கோவிலை பக்தர்கள் தரிசிக்கலாம் மோடி
    'இன்றே விசாரணை' - நடிகர் விஷால் கொடுத்த புகாருக்கு மத்திய அரசு பதில் விஷால்
    குன்னூர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணம் குன்னூர்
    வீடியோ: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025