LOADING...
அமெரிக்க அனுபவம் மட்டும் போதாது; என்ஆர்ஐ ரிட்டர்ன்ஸை முந்தும் உள்ளூர் ஹீரோக்கள்; இந்திய ஸ்டார்ட்அப் துறையில் அதிரடி மாற்றம்
வெளிநாடு வாழ் இந்தியர்களை விட உள்நாட்டுத் தொழில்முனைவோரே அதிகம் சாதிப்பதாக ஆய்வில் தகவல்

அமெரிக்க அனுபவம் மட்டும் போதாது; என்ஆர்ஐ ரிட்டர்ன்ஸை முந்தும் உள்ளூர் ஹீரோக்கள்; இந்திய ஸ்டார்ட்அப் துறையில் அதிரடி மாற்றம்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 09, 2026
11:12 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் ஸ்டார்ட்அப் துறையில் ஒரு புதிய கட்டமைப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அன்னா லீ சக்சேனியன் மற்றும் பிரபல தொழிலதிபர் விவேக் வாதவா ஆகியோரின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 2016 முதல் 2023 வரை தொடங்கப்பட்ட 596 உயர்தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஆய்வு செய்ததில், வெளிநாட்டு அனுபவம் கொண்டவர்களை விட, இந்தியாவிலேயே வளர்ந்த தொழில்முனைவோரே நீண்ட கால அடிப்படையில் சிறப்பாகச் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

ரிட்டர்னி பேரடாக்ஸ்

ரிட்டர்னி பேரடாக்ஸ் என்பது என்ன?

முன்பெல்லாம் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்து திரும்புபவர்களே (NRIs) புதுமையான நிறுவனங்களை உருவாக்குவார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை மாறியுள்ளது. இதை ஆய்வாளர்கள் "ரிட்டர்னி பேரடாக்ஸ்" என்று அழைக்கிறார்கள். இந்தியாவின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தொழில்நுட்பத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்ட உள்ளூர் நிறுவனங்களே அதிக லாபம் மற்றும் வளர்ச்சியை எட்டுகின்றன. இந்திய சந்தையின் நுணுக்கங்களை நேரடியாக அறிந்திருப்பது, இப்போது மிகப்பெரிய சொத்தாகக் கருதப்படுகிறது.

பின்னடைவு

ஆரம்பகால வசதியும் பின்னடைவும்

வெளிநாடுகளிலிருந்து திரும்புபவர்களுக்கு ஒரு முக்கியச் சாதகமான அம்சம் உள்ளது. அவர்களுக்கு உலகளாவிய தொடர்பு வட்டங்கள் இருப்பதால், ஆரம்பக்கட்ட முதலீடுகளை எளிதில் பெற முடிகிறது. ஆனால், காலப்போக்கில் இந்தச் சாதகம் மறைந்துவிடுகிறது. "முன்பு எங்களை (என்ஆர்ஐ) போன்றவர்களை இந்தியாவில் ராஜாக்களைப் போல நடத்தினார்கள். நாங்களே ஹீரோக்களாக இருப்போம் என்று நினைத்தேன். ஆனால், உள்ளூர் தொழில்முனைவோரோடு ஒப்பிடும்போது நாங்கள் பின்தங்கியே இருக்கிறோம்." என்று விவேக் வாதவா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

உலகத்தரம்

உலகத்தரம் வாய்ந்த இந்திய சூழல்

ஏற்கனவே சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் வெளிநாட்டுத் திறமையாளர்களை ஈர்க்க பல முயற்சிகளை எடுத்து வந்தன. ஆனால், இப்போது இந்தியா தனது சொந்தத் திறமையாளர்களைக் கொண்டே உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்களை (ஏஐ, ஃபின்டெக், மொபிலிட்டி போன்ற துறைகளில்) உருவாக்கும் நிலையை எட்டியுள்ளது. இதனால் அமெரிக்காவிற்குச் செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை குறையலாம் அல்லது அவர்கள் அங்கேயே தங்கும் காலம் சுருங்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement

ஆய்வு

ஆய்வின் நம்பகத்தன்மை

இந்த ஆய்வின் முடிவுகள் ஆய்வாளர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதால், ஹார்வர்டு மற்றும் கார்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியர்களிடம் தங்களது தரவுகளைச் சரிபார்க்கக் கொடுத்துள்ளனர். அத்தனை சோதனைகளுக்கும் பிறகும், உள்ளூர் தொழில்முனைவோரே முன்னிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. "இந்தியா இனி எதற்கும் அமெரிக்காவைச் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அவர்களால் சுயமாகவே புதுமைகளைப் படைக்க முடியும்." என்பதே இந்த ஆய்வின் இறுதிச் செய்தியாகும்.

Advertisement