LOADING...
'ஸ்பிரிட்' படப்பிடிப்பு தளத்தில் மோதல்? - பிரபாஸ் படத்தில் இருந்து விலகினாரா பிரகாஷ் ராஜ்?
'ஸ்பிரிட்' திரைப்படத்தில் இருந்து நடிகர் பிரகாஷ் ராஜ் விலகியுள்ளதாக தகவல்

'ஸ்பிரிட்' படப்பிடிப்பு தளத்தில் மோதல்? - பிரபாஸ் படத்தில் இருந்து விலகினாரா பிரகாஷ் ராஜ்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 09, 2026
11:23 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் நடிகர் பிரபாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் இருந்து பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகை தீபிகா படுகோன் இப்படத்தில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது பிரகாஷ் ராஜும் விலகியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மோதலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பின் போது, ஒரு குறிப்பிட்ட காட்சி மற்றும் திரைக்கதை தொடர்பாக இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கும் பிரகாஷ் ராஜுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்த முரண்பாடுகள் முற்றிய நிலையில், பிரகாஷ் ராஜ் அந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

விவரங்கள்

பிரகாஷ் ராஜின் காட்சிகள் நீக்கப்படுமா?

'ஸ்பிரிட்' படத்தின் ஆரம்பக்கால விளம்பர வீடியோக்களில் பிரகாஷ் ராஜின் கம்பீரமான குரல் இடம்பெற்று, அவரது கதாபாத்திரம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. தற்போது அவர் வெளியேறியுள்ளதால், அவருடன் ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது படப்பிடிப்பில் மேலும் தாமதத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கு முன்னதாக, இப்படத்தின் கதாநாயகியாக முதலில் பேசப்பட்ட தீபிகா படுகோன், பணி நேரம் மற்றும் சம்பளம் தொடர்பான கருத்து வேறுபாடுகளால் படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக தற்போது திரிப்தி திம்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் பிரபாஸ் ஒரு முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படம் 2027 மார்ச் 5 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement