NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை
    தமிழ்நாட்டில் நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.

    சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை

    எழுதியவர் Srinath r
    Oct 30, 2023
    02:27 pm

    செய்தி முன்னோட்டம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சலில் மாணவி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    சின்னசேலம் அடுத்த இரவார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ரவி என்பவரின் மகள், அங்குள்ள அரசுப் பள்ளியில் கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தார்.

    இந்நிலையில் நீட் தேர்வு எழுதியவர் 250 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதாக கூறப்படுகிறது. குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சலில் இருந்தவர், கடந்த வாரம் வயலுக்கு அடிக்கும் களைக்கொல்லி மருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.

    பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததை வீட்டில் சொல்லாமல் வயிற்று வலி ஏற்பட்டதாக வீட்டில் கூறியுள்ளார். இதனால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாணவியை அழைத்துச் சென்று பெற்றோர் சிகிச்சை அளித்தனர்.

    2nd card

    சிகிச்சை பலன் இல்லாமல் மாணவி உயிரிழப்பு

    இந்நிலையில், வயிற்று வலி மேலும் அதிகமாகவே மேல் சிகிச்சைக்காக, மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மாணவி உயிரிழந்தார்.

    மாணவியின் உடல் பிரதேச பரிசோதனைக்கு பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும் மாணவி நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

    காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    தற்கொலை தடுப்பு மாநில உதவி மையம் :104, சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம், எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தற்கொலை
    நீட் தேர்வு
    காவல்துறை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    காவல்துறை

    பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல்  டெல்லி
    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது  கைது
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை  சென்னை உயர் நீதிமன்றம்
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025