Page Loader
கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா  
இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா  

எழுதியவர் Sindhuja SM
Oct 29, 2023
12:42 pm

செய்தி முன்னோட்டம்

இன்று காலை கேரளாவின் களமச்சேரியில் உள்ள ஒரு கிறிஸ்தவக் குழுவின் மாநாட்டு மையத்தில் ஒரு பயங்கரமான குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஒருவர் உயிரிழந்தார், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், தொடர்ந்து 3 குண்டுவெடிப்புகள் நடந்ததாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறியுள்ளன. தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) குழுவினரும், உள்ளூர் சட்ட அமலாக்கப் பிரிவினரும் இணைந்து தற்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று காலை 9 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக உள்ளூர் காவல்துறை கூறியுள்ளது.

எக்னசிவெல்

விடுமுறையில் உள்ள சுகாதாரப் பணியாளர்கள் வேலைக்கு திரும்ப உத்தரவு 

இதனையடுத்து, குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து மக்களை வெளியேற்ற காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு அழைப்புவிடுத்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையை உறுதி செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த சம்பவம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அது முடிந்தவுடன் கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், விடுமுறையில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்களையும் உடனடியாக வேலைக்கு திரும்புமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வலியுறுத்தியுள்ளார். வெடிவிபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வித் துறை இயக்குநர்களுக்கு அவர் மேலும் உத்தரவிட்டார். இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதல்வரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார்.