NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி 
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது - போலீசார் அதிரடி 

    எழுதியவர் Nivetha P
    Oct 28, 2023
    05:51 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரில் தி.நகர் பகுதியில் பாலன் இல்லம் என்னும் தமிழக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு நேற்று(அக்.,27)இரவு 9 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் கற்கள், பாட்டில்கள் உள்ளிட்டவைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    ஆனால் இந்த தாக்குதல் நடத்தப்பட்ட பொழுது அலுவலகத்திற்குள் யாரும் இல்லை என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து அக்கட்சி நிர்வாகிகள் மாம்பலம் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    அந்த புகாரின் பேரில், காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வினை மேற்கொண்டனர்.

    சம்பவம் 

    மது போதையில் தாக்குதல் நடத்தியதாக தகவல் 

    இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி, இந்த சம்பவம் குறித்து காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,

    கட்சி அலுவலகத்திற்கு 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு அளித்து, அலுவலகத்தில் உள்ள கட்சியினரின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    மேலும், இச்சம்பவத்திற்கு அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழுவினர் தங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்காமல் தண்டனை பெறுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து, இதில் சம்பந்தப்பட்ட அலெக்ஸ், பார்த்திபன், அருண்குமார், பாரதி என்னும் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    இவர்கள் நால்வரும் மதுப்போதையில் இவ்வாறு அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கம்யூனிஸ்ட்
    காவல்துறை
    காவல்துறை
    சென்னை

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    கம்யூனிஸ்ட்

    கேரள மக்களை பாதுகாக்கவே பாப்புலர் பிரண்ட்'க்கு மத்திய அரசு தடை விதித்தது - அமித்ஷா கேரளா
    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    தமிழ்நாட்டில் 12 மணிநேர வேலை, 3 நாள் விடுமுறை மசோதா நிறைவேற்றம்  தமிழ்நாடு
    செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த டி.ராஜா: சென்னையில் பரபரப்பு சென்னை

    காவல்துறை

    பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது  டெல்லி
    திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு  திருப்பதி
    கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா? கடலூர்
    அசாம்: குழந்தை திருமணம் செய்து கொண்ட 800 பேர் கைது  அசாம்

    காவல்துறை

    பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல்  டெல்லி
    சென்னையில் தொடர் போராட்டம் நடத்திவந்த ஆசிரியர்கள் கைது  கைது
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகள் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை  சென்னை உயர் நீதிமன்றம்
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது- இரண்டு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது மணிப்பூர்

    சென்னை

    பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு ஸ்டாலின்
    சென்னையில் நடந்த சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் மூலம் தேர்வு எழுதி மோசடி - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    அக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் இஸ்ரோ
    சரிந்தது தங்க விலை: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025