NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 
    மூன்று மாதங்களுக்கு பிறகு, சிசோடியா மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்.

    மதுபானக் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 30, 2023
    11:56 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(அக் 30) தள்ளுபடி செய்தது.

    சிசோடியா தாக்கல் செய்த இருவேறு ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை அக்டோபர் 17ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பை அறிவித்தது.

    338 கோடியை அவர் மோசடி செய்ததாக கூறப்படுவது மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என்பதால், ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    எனவே மூன்று மாதங்களுக்கு பிறகு, விசாரணை மந்தமாகவோ அல்லது மெதுவாகவோ நடந்தால், சிசோடியா மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்.

    சிஜேகே

    'லஞ்சம் கொடுக்கப்படும் என்ற அனுமானத்தில் சிசோடியாவை பிடித்து வைத்திருக்க முடியாது': உச்ச நீதிமன்றம் 

    சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சி(ஏஏபி) தலைவர் சிசோடியாவுக்கு எதிரான ஆதாரங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது என்பதற்கு இந்த உத்தரவு ஒரு அறிகுறி என்று அமலாக்க இயக்குநரகத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    அக்டோபர் 17ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, ​​டெல்லி மதுபானக் கொள்கையை மாற்றியமைக்க லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவது குற்றத்தின் ஒரு பகுதியாக இல்லை என்றால், சிசோடியா மீதான பணமோசடி வழக்கை நிரூபிப்பது கடினம் என்று அமலாக்க இயக்குநரகத்திடம் உச்ச நீதிமன்றம் கூறியது.

    லஞ்சம் கொடுக்கப்படும் என்ற அனுமானத்தில் சிசோடியாவை பிடித்து வைத்திருக்க முடியாது என்றும் சட்டத்தின் கீழ் என்ன பாதுகாப்பு இருந்தாலும், அது வழங்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அப்போது கூறியிருந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    உச்ச நீதிமன்றம்
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    ரவி மோகன் குற்றச்சாட்டுகளை மறுத்து அறிக்கை வெளியிட்ட மாமியார் சுஜாதா விஜயகுமார் ரவி
    அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதில் இவ்ளோ நன்மைகள் இருக்கா? நாம் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டியவை கடன்
    2025 அவெனிஸ் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது சுஸூகி; விலை எவ்ளோ தெரியுமா? சுஸூகி
    130 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ஏரி மீண்டும் உருவான அதிசயம்; நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகம் அமெரிக்கா

    டெல்லி

    ஜி20: உலக தலைவர்களின் மனைவிகளுக்கு அளிக்கப்படும் வரவேற்பு பற்றி தெரிந்துகொள்ளுங்கள் ஜி20 மாநாடு
     ஜி20 மாநாடு - டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்  ராகுல் காந்தி
    ஜி20 மாநாடு: புதுடெல்லி பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்தார் பிரதமர் மோடி! ஜி20 மாநாடு
    டெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு  ரிஷி சுனக்

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி

    உச்ச நீதிமன்றம்

    செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் இனி பெற்றோர்களின் சொத்துக்களில் உரிமை உண்டு  சட்டம் பேசுவோம்
    சனாதனம் குறித்த பேச்சு - உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக டெல்லி காவல்துறையில் புகார்  உதயநிதி ஸ்டாலின்
    ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: உத்தரவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்  ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவா? பாரதமா? 2016ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது? இந்தியா

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025