'டிஸ்லெக்ஸியா' விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிவப்பு விளக்குகளால் மிளிர்ந்த குடியரசு தலைவர் மாளிகை
டெல்லி: டிஸ்லெக்ஸியா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குடியரசு தலைவர் மாளிகை மற்றும் நாடு முழுவதும் உள்ள பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கட்டிடங்களில் நேற்று(அக் 29 )மாலை சிவப்பு நிறத்தில் விளக்கேற்றப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் சர்வதேச டிஸ்லெக்ஸியா விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் 'கோ ரெட்' என்பதாகும். இந்த மாதம் முழுவதும் இந்த கருப்பொருளைச் சுற்றி நிகழ்வுகள் மற்றும் வாதிடும் பிரச்சாரங்கள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன. டிஸ்லெக்ஸியா மற்றும் பிற கற்றல் கோளாறுகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய களங்கத்தை அகற்றுவதற்காகவே இந்த பிரச்சாரம் நடத்தப்ட்டது. டிஸ்லெக்ஸியாவுக்கு எதிரான பாகுபாட்டை அகற்றி, பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பிரச்சாரத்தின் நோக்கமாகும்.