NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம் 
    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம்

    ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார் தவறானது - ஏடிஜிபி அருண் விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Oct 28, 2023
    12:29 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 25ம்.,தேதி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பானது நேற்று(அக்.,27)நடந்துள்ளது.

    இதில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

    அதில்,'குற்றவாளி வினோத் வைத்திருந்த 4 பெட்ரோல் குண்டுகளில் 2 குண்டுகள் சர்தார் பட்டேல் சாலையிலிருந்து வீச முயற்சி செய்துள்ளார். அந்த குண்டுகள் ஆளுநர் மாளிகை அருகேயிருந்த பேரிகேட் மீது விழுந்துள்ளது. ஆளுநர் மாளிகைக்குள் வீசப்படவில்லை' என்று கூறியுள்ளார்.

    அதேபோல் குற்றவாளி அங்கிருந்து தப்பித்து ஓடவும் இல்லை, ஆளுநர் மாளிகை பணியாளர்கள் அவரை பிடிக்கவும் இல்லை.

    சென்னை காவல்துறையை சேர்ந்த 5 காவலர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்றும் விளக்கமளித்துள்ளார்.

    தாக்குதல் 

    73 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல் 

    இதனைத்தொடர்ந்து 'கடந்தாண்டு மயிலாடுதுறையில் ஆளுநர் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதுகுறித்த புகாருக்கு காவல்துறை எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்குப்பதிவும் செய்யப்படவில்லை' என்று ராஜ்பவன் தெரிவித்திருந்தது.

    இதற்கு ஏடிஜிபி அருண் விளக்கமளித்துள்ளார்.

    அதன்படி அவர், 'இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவில் ஆளுநர் வாகனம் சென்ற பின்னர் பின்னே வந்த தனியார் வாகனம் மீது ஒரேயொரு கறுப்புக்கொடி விழும். இதுதான் உண்மை' என்றும்,

    'வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தவறு, ஏப்ரல் 19 நடந்த இந்த சம்பவத்தில் 73 பேர் கைது செய்யப்பட்டனர். 53 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது' என்று கூறி அதற்கான முதல் தகவல் அறிக்கையையும் காண்பித்தார்.

    விரைவில் இதற்கான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஏடிஜி அருண் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை
    காவல்துறை
    சென்னை
    கைது

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    காவல்துறை

    சென்னை பெட்ரோல் பங்க் விபத்தின் எதிரொலி - பங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள்  பெட்ரோல்
    பக்கத்துவீட்டு மட்டன் கறியினை சாப்பிட்ட நாய் சுட்டுக் கொலை - க்ரைம் ஸ்டோரி   க்ரைம் ஸ்டோரி
    மிகவும் தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி டெல்லியில் பிடிபட்டார்  டெல்லி
    பெண் போலீஸை கொன்றுவிட்டு இரண்டு வருடமாக அந்த பெண் உயிரோடு இருப்பது போல் நாடகமாடிய கான்ஸ்டபிள் கைது  டெல்லி

    காவல்துறை

    திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு  திருப்பதி
    கடலூரில் பள்ளி மாணவன் குத்தி கொலை; ஓரின சேர்க்கை காரணமா? கடலூர்
    அசாம்: குழந்தை திருமணம் செய்து கொண்ட 800 பேர் கைது  அசாம்
    பயங்கரவாத எதிர்ப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனருக்கு 7 நாள் காவல்  டெல்லி

    சென்னை

    சென்னை மெட்ரோ 2ம் கட்ட வழித்தடம் - டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மெட்ரோ
    ஆயுத பூஜை கொண்டாட்டம் - சென்னையிலிருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்  தமிழ்நாடு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 14 தங்கம் வெள்ளி விலை
    ஐந்தாண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி- முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு முதல் அமைச்சர்

    கைது

    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் கொலை
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கொலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025