NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர்
    இன்ஜினியூட்டி ஹெலிகாப்டர் மற்றும் பல்ராம்.

    செவ்வாயில் இயங்கும் நாசாவின் ஹெலிகாப்டரை வடிவமைத்த இந்தியர்

    எழுதியவர் Srinath r
    Oct 30, 2023
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    செவ்வாய் கிரகத்தில் இயங்கும் முதல் ஹெலிகாப்டரை, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்காக இந்தியர் உருவாக்கியுள்ளார்.

    சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில், இயந்திர பொறியியலில் இளங்கலை படித்த பாப் பல்ராம், தற்போது நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய, பெர்செவரன்ஸ் ரோவரின் ஒரு பகுதியான இந்த ஹெலிகாப்டர், இன்ஜினியூட்டி(Ingenuity) என்று அழைக்கப்படுகிறது.

    தற்போது வரை செயல்பாட்டில் இருக்கும் இந்த ஹெலிகாப்டர், 1.8 கிலோ எடை மட்டுமே கொண்டது. மேலும் இந்த ஹெலிகாப்டர் பூமிக்கு வெளியில் பறந்த முதல் ஹெலிகாப்டர் என்ற பெருமையுடையது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    செவ்வாயில் தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பிய இன்ஜினியூட்டி

    இன்ஜினியூட்டி சோதனை முதன்முறையாக வேறொரு கிரகத்தில், கட்டுப்படுத்தப்பட்ட ஹெலிகாப்டரை சோதிக்கும் ஒரு வகையான பரிசோதனையாகும்.

    செவ்வாய் கிரகத்தில் காற்றின் அடர்த்தி குறைவு என்பதால், இன்ஜினியூட்டி ஹெலிகாப்டரை பறக்க வைக்க நிறைய தொழில்நுட்ப சிரமங்கள் இருந்ததாக பல்ராம் தெரிவித்துள்ளார்.

    இன்ஜினியூட்டி, பெர்செவரன்ஸ் ரோவரில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி செவ்வாய் கிரகத்தை எட்டியது. பின்னர் ஏப்ரல் 3 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தன் பயணத்தை தொடங்கியது.

    இது ஒரு மாதம் பணியாற்றி தகவல்களை சேகரித்து பூமிக்கு அனுப்பியது. மேலும் தற்போது வரை அது செயல்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    விரைவில் ஓய்வு அறிவிக்கும் பல்ராம்

    நாசாவின் பல முக்கிய விண்வெளித் திட்டங்களுக்கு மூலமாக செயல்பட்ட பல்ராம் விரைவில் ஓய்வு அறிவிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் இந்தியா திரும்பி வந்து, இந்திய மாணவர்களுக்கு விண்வெளி மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக்கு மேலும் பங்காற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    பல்ராம் தனது வெற்றிக்கு காரணமாக, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் தான் பெற்ற பயிற்சி என சுட்டிக்காட்டியவர், நூற்றுக்கணக்கான மாணவர்கள் அவர் போல் வளர்ந்து இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார்கள் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    நாசா
    சென்னை
    விண்வெளி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    லெபனானில் உள்ள பயங்கரவாத அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல்: போர் விரிவடைய வாய்ப்பு  இஸ்ரேல்
    'IC 5332' விண்மீன் மண்டலத்தை துல்லியமாகப் படம்பிடித்த ஹபுள் தொலைநோக்கி விண்வெளி
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து இஸ்ரேல்
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    நாசா

    ஆர்ட்டெமிஸ்- 2 விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிவித்த நாசா! விண்வெளி
    600 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கேலக்ஸியை படம்பிடித்த நாசா! விண்வெளி
    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! உலகம்
    விண்ணில் செலுத்தப்பட்டு 33-வது ஆண்டைக் கொண்டாடும் ஹபுள் தொலைநோக்கி!  விண்வெளி

    சென்னை

    அக்டோபர் 21இல் ககன்யான் சோதனை ஓட்டம்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் இஸ்ரோ
    சரிந்தது தங்க விலை: இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் வெள்ளி விலை
    தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்  ரயில்கள்
    220 கோடி நிதி திரட்டி சென்னையை சேர்ந்த விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஸ்டார்ட்அப்

    விண்வெளி

    ஆதித்யா L-1 விண்கலம் ஏவப்படுவதை நேரில் பார்வையிட வேண்டுமா? இஸ்ரோ
    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமான குடியேற்றத்தை நிகழ்த்த 22 மனிதர்களே போதும்- புதிய ஆய்வு அறிவியல்
    ஆதித்யா L1 கவுண்ட் டவுன் துவக்கம் சூரியன்
    ஆதித்யா L1 திட்டத்திற்கும் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழர் ஆதித்யா L1
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025