NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம்
    கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம்

    கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 30, 2023
    08:45 am

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில், நேற்று காலை, ஒரு சமய கூட்டத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில், சம்பவ இடத்தில் ஒருவர் பலியான நிலையில், இன்று பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. அதில் 12 வயது சிறுமியும் ஒருவர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கேரளாவின் களமசேரி என்ற ஊரில் உள்ள மாநாடு மையம் ஒன்றில், கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. யெகோவாவின் பிரார்த்தனைக் கூட்டம் என்ற பெயரில் நடைபெற்ற அந்த மூன்று நாள் கூட்டத்தின் கடைசி நாளான நேற்று, தொடர்ச்சியாக மூன்று குண்டுகள் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    இந்த குண்டுவெடிப்பிற்கு தான் தான் காரணம் என டொமினிக் மார்ட்டின் என்பவர், நேற்று போலீசில் சரணடைந்துள்ளார்.

    card 2

    குண்டு வெடிப்பை தொடர்ந்து, டெல்லி, சென்னையின் பாதுகாப்பு அதிகரிப்பு 

    இந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    குறிப்பாக, கேரளாவின் எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களிலும், கர்நாடகா, மும்பை மற்றும் தலைநகர் டெல்லியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னையிலும், போலீஸ் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளாவிலிருந்து, சென்னைக்கு வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்த குண்டு வெடிப்பில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின், குண்டுவெடிப்பு நடந்த அதே 'யெகோவாவின் சாட்சிகள்' சபையின் உறுப்பினர் ஆவார்.

    அந்த கிறிஸ்தவ சபை, தேச விரோத செயலில் ஈடுபட்டதால் தான், குண்டு வைத்ததாக, அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    சரணடைவதற்கு முன்பு, குண்டுவைத்ததற்கான காரணத்தை அவர் முகநூல் லைவ் மூலம் தெரிவித்திருந்தார்.

    அவரது இணைய கணக்குகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    card 3

    அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த கேரளா முதலமைச்சர் 

    இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், இன்று அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்த குண்டுவெடிப்பை குறித்து விசாரிக்க 20 பேர் கொண்ட விசாரணை குழுவை அமைந்துள்ளதாகவும் அவர் நேற்று அறிவித்துள்ளார்.

    இந்த கொடூர சம்பவத்தை அம்மாநிலத்தின் அனைத்து கட்சிகளும் கடுமையாக கண்டித்துள்ளது. "இது பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் கேரள அரசின், மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமை தான்" என எதிர்க்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில், இந்த சம்பவத்தை மத்திய புலனாய்வு துறையினர், கேரளாவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    இந்தியாவின் ஏப்ரல் மாத பாக்ஸ்ஆபீஸ் வசூலில் முதலிடத்தில் அஜித்தின் GBU! நடிகர் அஜித்
    லாகூரில் நடந்த விபத்தில் LeT இணை நிறுவனர் படுகாயம்; ISI பாதுகாப்பில் மருத்துவமனையில் சிகிச்சை லஷ்கர்-இ-தொய்பா
    விவாகரத்து வழக்கில் திருப்பம்: நடிகர் ஜெயம் ரவியிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி விவாகரத்து
    சத்தீஸ்கர்: பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மாவோயிஸ்ட்

    கேரளா

    கேரளா மாநில பெயரினை மாற்ற முதல்வர் பினராயி விஜயன் முடிவு பினராயி விஜயன்
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது ஆடி
    நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    நேரு டிராபி படகுப்போட்டியில் நான்காவது முறையாக வீயபுரம் சுண்டனில் அணி வெற்றி இந்தியா

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025