NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'தேச விரோத செயலில் சபை ஈடுபட்டது': கேரள தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் பகீர் வாக்குமூலம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'தேச விரோத செயலில் சபை ஈடுபட்டது': கேரள தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் பகீர் வாக்குமூலம் 
    இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் வெளியானதும் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    'தேச விரோத செயலில் சபை ஈடுபட்டது': கேரள தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் பகீர் வாக்குமூலம் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 29, 2023
    07:14 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள களமசேரி பகுதியில் இன்று காலை நடந்த ஒரு கிறிஸ்தவ குழுவின் வழிபாட்டு கூட்டத்தில் திடீரென்று 3 குண்டுகள் வெடித்தன.

    இந்த குண்டுவெடிப்புகளால் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். 45 பேர் காயம் அடைந்தனர். அதில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

    இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் வெளியானதும் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழகம், கர்நாடகா ஆகிய கேரளாவை ஒட்டி இருக்கும் மாநிலங்களில் மட்டுமல்லாமல், டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களிலும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் சோதனை பலப்படுத்தப்பட்டது.

    தீவிரவாத எதிர்ப்பு படையினரான NIA உட்பட முக்கிய மத்திய குழுக்கள் கேரளாவில் குவிக்கப்பட்டன.

    டவ்ஜ்கன்

    டொமினிக் வெடிகுண்டை வெடிக்க வைத்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன

    இந்நிலையில், இன்று மாலை கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர், குண்டுவெடிப்புக்கு தானே காரணம் என்று கூறி கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

    இவர் குண்டுவெடிப்பு நடந்த அதே 'யெகோவாவின் சாட்சிகள்' கிறிஸ்தவ சபையின் உறுப்பினர் ஆவார்.

    சரணடைவதற்கு முன்பு, குண்டுவைத்ததற்கான காரணத்தை அவர் முகநூல் லைவ் மூலம் தெரிவித்துள்ளார்.

    அது போக, வீட்டில் இருந்தும் மொபைல் போனில் இருந்தும் அவர் வெடிகுண்டை வெடிக்க வைத்ததற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

    'யெகோவாவின் சாட்சிகள்' கிறிஸ்தவ சபை தேச விரோத செயலில் ஈடுபட்டதால் தான் குண்டு வைத்ததாக அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    மேலும், பலமுறை சபையுடன் தகராறு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    வெடிகுண்டு வைத்ததற்கான காரணத்தை முகநூலில் கூறிய டொமினிக் மார்ட்டின்

    #BREAKING வெடிகுண்டு வைத்ததற்கான காரணத்தை முகநூல் மூலம் லைவாக தெரிவித்துள்ளார் டொமினிக் மார்ட்டின் #KeralaBombBlast #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/w4B8mTakGd

    — News18 Tamil Nadu (@News18TamilNadu) October 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    குண்டுவெடிப்பு

    சமீபத்திய

    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

    கேரளா

    நடிகை தமன்னா செய்த காரியம் - வைரலாகும் வீடியோ ஜெயிலர்
    கேரளா மாநில பெயரினை மாற்ற முதல்வர் பினராயி விஜயன் முடிவு பினராயி விஜயன்
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது ஆடி
    நாளை உதகைக்கு வருகை தருகிறார் ராகுல் காந்தி ராகுல் காந்தி

    குண்டுவெடிப்பு

    உணவு பற்றாக்குறை, இருளில் மூழ்கிய காஸா - ஹமாஸ் படைக்கு குறிவைத்த இஸ்ரேல் இஸ்ரேல்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்
    கேரளாவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயம் கேரளா
    கேரளாவில் நடந்த கிறிஸ்தவ கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு: கேரள முதல்வரை தொடர்பு கொண்டார் அமித்ஷா   கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025