உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

காணாமல் போன இந்தோனேசியப் பெண்ணின் உடல் ராட்சத மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து மீட்பு 

கடந்த வியாழன் அன்று காணாமல் போன இந்தோனேசியாவைச் சேர்ந்த 45 வயது பெண், 16 அடி நீளமுள்ள ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

08 Jun 2024

இந்தியா

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கூறியது பாகிஸ்தான் 

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் அமைதியை பேணும் என்றும் நீண்டகால காஷ்மீர் பிரச்சனையை தீர்க்கும் என்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம்(FO) நேற்று நம்பிக்கை தெரிவித்தது.

07 Jun 2024

சீனா

சீனாவில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சி, உண்மையில் குழாய் தண்ணீரா? வைரலான வீடியோவால் உருவான சர்ச்சை

சீனாவில் உள்ள பிரபலமான யுண்தாய் நீர்வீழ்ச்சியின் பின்னணியில் ஒரு மலை உச்சியிலிருந்து ராட்சச குழாய் மூலம் தண்ணீர் கொட்டுவதை காட்டும் வீடியோ ஒன்று, சீன சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்டது.

பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணம் மெக்சிகோவில் பதிவாகியுள்ளது

H5N2 பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் மனித மரணத்தை உலக சுகாதார நிறுவனம் (WHO) உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர், மெக்ஸிகோ நகரத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர்.

இளவரசி கேட் மிடில்டன் இப்போதைக்கு அரச கடமைகளுக்கு 'திரும்ப முடியாது': அறிக்கை

இந்திய டுடே வெளியிட்ட செய்திகளின்படி, அரச குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்களின்படி, கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் தனது அரச பணிகளுக்கு வர வாய்ப்பில்லை.

06 Jun 2024

தேர்தல்

தேர்தல் முடிவுகளை பற்றி சீனா, பாகிஸ்தான், அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டது என்ன?

இந்தியாவில் மோடி தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்றாலும், பாஜக தனிப்பெரும்பான்மை அடையத்தவறி விட்டது.

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா மக்களை அச்சுறுத்தும் வெப்ப அலை

அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலைகளின் அபாயகரமான சாத்தியம் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் ஆணுறுப்பு அகற்றப்படும்: லூசியானாவில் அதிரடி சட்டம்

அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலம், குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு எதிரான ஒரு சர்ச்சைக்குரிய சட்டத்தை இயற்ற உள்ளது.

05 Jun 2024

லெபனான்

லெபனானில் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்திய இஸ்ரேல்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டணம்

மோதலில் பாதிக்கப்பட்ட தெற்கு லெபனானில் உள்ள குறைந்தபட்சம் ஐந்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வெள்ளை பாஸ்பரஸ் எரியூட்டும் குண்டுகளை பயன்படுத்தியுள்ளதாக உலகளாவிய மனித உரிமைகள் குழு கூறியுள்ளது.

'மாலத்தீவுகள் வேண்டாம், இந்திய கடற்கரைகளுக்கு செல்லுங்கள்': தனது குடிமக்களிடம் அறிவுறுத்தியது இஸ்ரேல் 

அழகிய கடற்கரைகளுக்குப் புகழ்பெற்ற மாலத்தீவுகள், காசாவில் நடந்துவரும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலியர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது.

கலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவி: அமெரிக்காவில் தொடரும் மர்ம சம்பவங்கள் 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 23 வயது இந்திய மாணவி ஒருவர் காணாமல் போய் ஒரு வாரமாகிவிட்ட நிலையில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட இதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் கிளாடியா ஷீன்பாம் 

ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் 61 வயதான மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயர் 60% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக மெக்சிகோவின் அதிகாரப்பூர்வ தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் நுழைவதற்கு மாலத்தீவு தடை

மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்ஸு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, மாலத்தீவு நாட்டிற்குள் இஸ்ரேலிய பிரஜைகள் நுழைவதைத் தடைசெய்யும் சட்டத்தில் திருத்தம் செய்யவுள்ளதாக தீவு நாடு அறிவித்தது.

02 Jun 2024

இஸ்ரேல்

அதிபர் பைடனின் "குறைபாடுகள் நிறைந்த" காசா திட்டத்தை ஏற்றுக்கொண்டது இஸ்ரேல்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் முன்மொழியப்பட்ட காசா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உதவியாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

POK வெளிநாட்டை சேர்ந்த பகுதி என்பதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான் அரசாங்கம் 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(பிஓகே) ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும், அதன் மீது பாகிஸ்தானுக்கு அதிகாரம் இல்லை என்றும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

31 May 2024

இஸ்ரேல்

இஸ்ரேல் போரை நிறுத்தினால் முழு உடன்படிக்கைக்கு ஹமாஸ் தயார்

காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான தனது போரை இஸ்ரேல் நிறுத்தினால், பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உட்பட "முழுமையான உடன்பாட்டை எட்ட தயாராக உள்ளோம்" என்று ஹமாஸ் வியாழனன்று கூறியது.

டிரம்ப்பை குற்றவாளியாக தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்; அதிபர் தேர்தலில் சிக்கலா? 

முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், 2016 தேர்தலுக்கு முன்னதாக ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடனிருந்த உறவை மறைக்க தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து, அவருக்கு $1,30,000 வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

31 May 2024

ஐரோப்பா

சந்தேகத்திற்குரிய ரஷ்யாவின் நாசவேலைகள் காரணமாக ஐரோப்பா உஷார் நிலை

ரஷ்யாவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தீ மற்றும் நாசவேலைகள் காரணமாக ஐரோப்பிய பாதுகாப்பு சேவைகள் தற்போது மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.

30 May 2024

இஸ்ரேல்

"All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு எதிராக இஸ்ரேலின் "Where were your eyes on..."

கடந்த சில நாட்களாக இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வரும்,"All Eyes on Rafah" என்ற புகைப்படத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார் 

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

150 பலூன்கள் மூலம் குப்பைகளை தென் கொரியாவுக்குள் வீசிய வட கொரியா

குப்பைகளை சுமந்து செல்லும் குறைந்தது 150 பலூன்களை வட கொரியா, தென் கொரியாவின் மீது வீசியுள்ளது.

29 May 2024

காசா

காசா பகுதி மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை அடுத்து ட்ரெண்ட் ஆகும் ''All Eyes on Rafah''

தெற்கு காசா நகரத்தின் மீது இஸ்ரேல் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி வரும் நிலையில், அந்த நகரத்தில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பல லட்சம் பேர் சமூக வளைத்தளங்களில் குரல் கொடுத்துள்ளனர்.

இஸ்ரேல் இராணுவத் தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் பலி: இஸ்ரேல் எல்லைமீறவில்லை என்கிறது அமெரிக்கா 

தெற்கு காசா நகரத்தில் உள்ள ஒரு கூடார முகாமில் தங்கி இருந்த 45 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

28 May 2024

இஸ்ரேல்

ரஃபா தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்ததாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, "அது துயரகரமான தவறு" என ஒப்புக்கொண்டார்.

கலிபோர்னியாவில் இஸ்லாமிய வெறுப்பை விட இந்து மத வெறுப்பு அதிகரித்துள்ளதாக தகவல் 

அமெரிக்கா: கலிபோர்னியாவின் சிவில் உரிமைகள் திணைக்களத்தின் (CRD) அறிக்கையின்படி, கலிபோர்னியாவில் இந்து விரோத வெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி 

பப்புவா நியூ கினியா நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 2,000 க்கும் அதிகமானோர் புதையுண்டதாக பப்புவா நியூ கினியா தேசிய பேரிடர் மையம் தெரிவித்துள்ளது.

ரஃபா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: இடம்பெயர்ந்தோர் கூடாரங்கள் தாக்கப்பட்டதில் 30 பேர் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில், இடம்பெயர்ந்தோர் வசிக்கும் தெற்கு காசா பகுதி நகரமான ரஃபாவில், குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் என்றும், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

26 May 2024

உலகம்

பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670க்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 670க்கும் மேல் அதிகரித்தது என்று குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு 

காசா மோதல் எட்டாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்த கும்பல்

பாகிஸ்தானின் சர்கோதா நகரில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் ஒரு கும்பல் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி 

வடக்கு பப்புவா நியூ கினியாவில் (PNG) ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தனர். மேலும், 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

24 May 2024

ஈரான்

மறைந்த ஈரான் அதிபர் ரைசியின் மரணம் குறித்த முதல் அறிக்கை வெளியானது

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்தவர்களின் மரணத்திற்கு வழிவகுத்த சமீபத்திய ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முதல் விசாரணை அறிக்கையை ஈரானின் ஆயுதப் படைகளின் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

உலக நாடுகளுக்கிடையே ஏற்படவுள்ள 'தொற்றுநோய் உடன்படிக்கை'

ஆண்டு தோறும் உலக சுகாதாரத் தலைவர்கள் ஜெனிவாவில் வருடாந்திர உலக சுகாதார பேரவைக்கு கூடுவார்கள்.

பாலஸ்தீனத்தை அங்கீகரித்த 3 நாடுகள்: 'பயங்கரவாதத்திற்கு வெகுமதி' என நெதன்யாகு கொந்தளிப்பு

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்களின் முடிவுகள் "பயங்கரவாதத்திற்கு வெகுமதி" வழங்குவதற்கு ஒப்பானது என்று கூறினார்.

விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் ஃபோங் இன்று லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் இருந்த அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

22 May 2024

நார்வே

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக நார்வே அங்கீகரிக்கும் என பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார்.

21 May 2024

லண்டன்

வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம் 

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டது.

நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம் 

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,

ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி

ஜார்ஜியாவின் அல்பரெட்டாவில் வேகமாகச் சென்ற கார் கவிழ்ந்ததால் மூன்று இந்திய-அமெரிக்க மாணவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இருவர் காயமடைந்தனர்.

21 May 2024

இஸ்ரேல்

ஈரான் அதிபரின் மரணத்தில் எங்களுக்கு தொடர்பு இல்லை: இஸ்ரேல் 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கும் இஸ்ரேலுக்கும் தொடர்பில்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.