NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டிரம்ப்பை குற்றவாளியாக தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்; அதிபர் தேர்தலில் சிக்கலா? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிரம்ப்பை குற்றவாளியாக தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்; அதிபர் தேர்தலில் சிக்கலா? 
    நியூயார்க் நடுவர் மன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது

    டிரம்ப்பை குற்றவாளியாக தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம்; அதிபர் தேர்தலில் சிக்கலா? 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 31, 2024
    09:05 am

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், 2016 தேர்தலுக்கு முன்னதாக ஆபாச பட நடிகை ஸ்டோமி டேனியல்ஸ் உடனிருந்த உறவை மறைக்க தேர்தல் பிரச்சார நிதியிலிருந்து, அவருக்கு $1,30,000 வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    பணம் செலுத்தியதை மறைக்க ஆவணங்களை பொய்யாக்கியதற்காக நியூயார்க் நடுவர் மன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.

    இரண்டு நாட்கள் நடந்த விவாதங்களுக்குப் பிறகு, 12 உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் மன்றம் டிரம்ப் எதிர்கொண்ட 34 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.

    இதன்மூலம் கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட முதல் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் ஆனார் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கின் தண்டனை விவரங்கள், ஜூலை 11-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

    மேல்முறையீடு

    தான் நிரபராதி என்றும், இது தனக்கெதிரான சதி என்றும் டிரம்ப் கருத்து

    குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஜூலை 15 ஆம் தேதி தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

    நவம்பர் 5 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி ஜோ பிடனிடமிருந்து வெள்ளை மாளிகையை மீண்டும் வெல்ல முயற்சிக்கும் போது, ​​இந்தத் தீர்ப்பு வந்துள்ளது.

    இந்த வழக்கில் அவர் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையை பெறக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும், அவர் தண்டனை அறிவிக்கும் முன்னர் அவர் சிறையில் அடைக்கப்படமாட்டார்.

    இந்நிலையில், டிரம்ப் தான் எந்த தவறு செய்யவில்லை என்று மறுத்துள்ளார். மேலும் அவர் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா

    அமெரிக்கா

    இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த தனது மாமாவை நரமாமிசம் உண்பவர்கள் சாப்பிட்டதாக அதிபர் பைடன் பேச்சு  ஜோ பைடன்
    இஸ்ரேல் ஈரானை தாக்கப்போவது அமெரிக்காவுக்கு முன்பே தெரியும்  இஸ்ரேல்
    CAA விதிகள் இந்திய அரசியலமைப்பை மீறும்: அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை  குடியுரிமை (திருத்த) சட்டம்
    மணிப்பூர் வன்முறை, நிஜ்ஜார் கொலை ஆகியவற்றை குறிப்பிடும் அமெரிக்க மனித உரிமைகள் அறிக்கை மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025