NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி 

    பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2024
    05:46 pm

    செய்தி முன்னோட்டம்

    வடக்கு பப்புவா நியூ கினியாவில் (PNG) ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தனர். மேலும், 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கி.மீ தொலைவில் உள்ள 'எங்க' மாகாணத்தில் இருக்கும் காகலம் என்ற கிராமத்தில் பெரும்பாலான கிராமவாசிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த பேரழிவு ஏற்பட்டது.

    போர்ட் மோர்ஸ்பியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம், சேதம் மற்றும் உயிரிழப்புகளின் அளவை மதிப்பிடுவதற்கு PNG அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளது.

    இதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

    பப்புவா நியூ கினியா

    நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன 

    நிலச்சரிவால் பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஹெலிகாப்டர்களால் மட்டுமே செல்ல முடியும்.

    சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில், உயிர் பிழைத்தவர்களைத் தேடி குடியிருப்பாளர்கள் பாறைகள், வேரோடு சாய்ந்த மரங்கள் மற்றும் மண் மேடுகளின் மீது ஏறிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

    இந்த பேரழிவுக்கு பதிலளித்த பிரதமர் ஜேம்ஸ் மாரப், பேரிடர் அதிகாரிகள், பாதுகாப்புப் படை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவி வருவதாக தெரிவித்தார்.

    தற்போது பாதிக்கப்பட்டுள்ள பகுதி கடலோர மாநிலமாகும். எனவே, அந்த பகுதியில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் ஏற்படுவது வழக்கமாகும்.

    கடந்த மார்ச் மாதம், இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா
    உலகம்
    உலக செய்திகள்
    நிலச்சரிவு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஆஸ்திரேலியா

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - பேட்டிங் செய்த இலங்கை அணி 209 ரன் எடுத்து ஆல் அவுட்  உலக கோப்பை
    Sports Round Up: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா;மேலும் பல முக்கிய செய்திகள் உலக கோப்பை
    இந்த வருட தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு நடுவர்கள் இவர்களா? பாலிவுட்
    Sports Round UP: வங்கதேசத்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா; பதக்க வேட்டையில் இந்தியா; முக்கிய விளையாட்டுச் செய்திகள் உலக கோப்பை

    உலகம்

    தெற்கு கரோலினாவில் கார் விபத்துகுள்ளாகியதால் 3 இந்திய பெண்கள் பலி அமெரிக்கா
    துபாயில் திறக்கப்பட உள்ளது உலகின் மிகப்பெரிய விமான நிலையம்  துபாய்
    காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகள் ஒப்பந்தம் குறித்து ஜோ பைடன்-நெதன்யாகு விவாதம்  இஸ்ரேல்
    அக்டோபர் 2023 முதல் 31% இந்திய மசாலாக்கள் ஏற்றுமதியை நிராகரித்தது அமெரிக்கா  அமெரிக்கா

    உலக செய்திகள்

    இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டம்: உத்தரவை மீறிய மாணவர்களை இடைநீக்கம் செய்தது கொலம்பியா பல்கலைக்கழகம்  அமெரிக்கா
    காலிஸ்தான் தீவிரவாதி கொலை வழக்கில் 3 இந்தியர்கள் கனடாவில் கைது கனடா
    காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் ரஃபா பகுதி மீது தாக்குதல் நடத்துவோம்: இஸ்ரேல் எச்சரிக்கை  காசா
    3 இந்தியர்களை கனடா கைது செய்ததற்கு எஸ் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார் இந்தியா

    நிலச்சரிவு

    ஹிமாச்சல் நிலச்சரிவு: 15-கிமீ டிராபிக் ஜாமால் சுற்றுலா பயணிகள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    உத்தரகாண்டில் கனமழை, நிலச்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை  உத்தரகாண்ட்
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 26 பேர் உயிரிழப்பு, 86 பேரை காணவில்லை  மகாராஷ்டிரா
    மகாராஷ்டிரா நிலச்சரிவு: 78 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மீட்புப் பணிகள் நிறுத்தம் மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025