இஸ்ரேல் போரை நிறுத்தினால் முழு உடன்படிக்கைக்கு ஹமாஸ் தயார்
காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான தனது போரை இஸ்ரேல் நிறுத்தினால், பணயக்கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் உட்பட "முழுமையான உடன்பாட்டை எட்ட தயாராக உள்ளோம்" என்று ஹமாஸ் வியாழனன்று கூறியது. இதனை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் அறிக்கையில் அவர்கள் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஐ.நா.வின் உயர்மட்ட நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ) தாக்குதல்களை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள போதிலும், தெற்கு காஸா நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்து வரும் நிலையில் சமீபத்திய ஹமாஸ் அறிக்கை வந்தது. "எங்கள் மக்களின் மீதான ஆக்கிரமிப்பு, முற்றுகை, பட்டினி மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் வெளிச்சத்தில், (போர்நிறுத்த) பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய பிரிவுகள் ஏற்றுக்கொள்ளாது" என்று ஹமாஸ் அறிக்கை கூறுகிறது.
Twitter Post
ஹமாஸ் பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால் இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும்
இந்த அறிக்கையில், "இன்று, ஆக்கிரமிப்பு காசாவில் உள்ள எங்கள் மக்களுக்கு எதிரான அதன் போரையும் ஆக்கிரமிப்பையும் நிறுத்தினால், ஒரு விரிவான பரிமாற்ற ஒப்பந்தத்தை உள்ளடக்கிய ஒரு முழுமையான உடன்பாட்டை எட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்று எங்கள் தெளிவான நிலைப்பாட்டை நாங்கள் மத்தியஸ்தர்களிடம் தெரிவித்தோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸின் கடந்தகால உடன்படிக்கை நிபந்தனைகளில் சம்மந்தமில்லை என நிராகரித்த இஸ்ரேல், அதன் போர் முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளது. பணயக்கைதிகளை மீட்பதிலும், ஹமாஸ் போராளிகளை வேரறுப்பதிலும் அதன் ரஃபா தாக்குதல் கவனம் செலுத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது. இதற்கிடையே காசாவில் ஹமாஸ் மீதான அதன் போர் ஆண்டு முழுவதும் தொடரும் என்று செவ்வாயன்று இஸ்ரேல் கூறியது.