NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / POK வெளிநாட்டை சேர்ந்த பகுதி என்பதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான் அரசாங்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    POK வெளிநாட்டை சேர்ந்த பகுதி என்பதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான் அரசாங்கம் 

    POK வெளிநாட்டை சேர்ந்த பகுதி என்பதை ஒப்புக்கொண்டது பாகிஸ்தான் அரசாங்கம் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 01, 2024
    04:35 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(பிஓகே) ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும், அதன் மீது பாகிஸ்தானுக்கு அதிகாரம் இல்லை என்றும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

    காஷ்மீர் கவிஞரும் பத்திரிகையாளருமான அகமது பர்ஹாத் ஷா கடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் போது பாகிஸ்தானின் கூடுதல் அட்டர்னி ஜெனரல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்(பிஓகே) வெளிநாட்டுக்கு சொந்தமானது என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

    பாகிஸ்தானின் உளவு அமைப்புகளால் ராவல்பிண்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடத்தப்பட்ட அகமது பர்ஹாத் ஷா மீதான வழக்கை இஸ்லாமாபாத் நீதிமன்றம் கடந்த மே 15-ஆம் தேதி விசாரித்தது.

    அந்த கவிஞரின் மனைவியின் மனுவைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மொஹ்சின் அக்தர் கயானி, ஃபர்ஹாத் ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றார்.

    பாகிஸ்தான் 

    'வெளிநாட்டுக்குள் பாகிஸ்தான் இராணுவம் ஏன் நுழைந்தது': நீதிபதி 

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்(பிஓகே) ஃபர்ஹாத் ஷா போலீஸ் காவலில் இருப்பதாகவும், அவரை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாது என்றும் நேற்று நீதிபதி கயானி முன் பாகிஸ்தானின் கூடுதல் அட்டர்னி ஜெனரல் வாதிட்டார்.

    அப்போது, காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பு மற்றும் அதன் சொந்த நீதிமன்றங்களைக் கொண்ட ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றும், POKஇல் உள்ள பாகிஸ்தான் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் வெளிநாட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளாகத் தோன்றுவதாகவும் கூடுதல் அட்டர்னி ஜெனரல் கூறினார்.

    பிஓகே ஒரு வெளிநாட்டுப் பகுதி என்றால், பாகிஸ்தான் ராணுவமும் பாகிஸ்தான் ரேஞ்சர்களும் எப்படி அந்த நிலத்திற்குள் நுழைந்தார்கள் என்று நீதிபதி கயானி கேள்வி எழுப்பினார்.

    பாகிஸ்தான் 

    பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகளை விமர்சித்த நீதிபதி 

    மேலும், ​​மக்களை வலுக்கட்டாயமாக கடத்தும் நடைமுறையை பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகள் தொடர்வதாக கயானி விமர்சித்திருந்தார்.

    நீதிமன்ற வாதத்தின் போது அகமது பர்ஹாத் ஷாவை திர்கோட் போலீசார் தடுத்து வைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது. அவர் மீது பிஓகேயில் இரண்டு வழக்குகள் உள்ளன.

    பாகிஸ்தான் உளவுத்துறையால் ராவல்பிண்டியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து ஃபர்ஹாத் ஷா கடத்தப்பட்டது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்த போது இந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாகிஸ்தான்

    கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்டது இந்திய கடற்படை  கடற்படை
    அரசு ரகசியங்களை கசியவிட்டதற்காக இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை இம்ரான் கான்
    தோஷகானா வழக்கில் பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை இம்ரான் கான்
    இந்தியா உதவியை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் மாலத்தீவுக்கு ஆதரவளிப்பதாக உறுதி மாலத்தீவு

    உலகம்

    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தார் நெதன்யாகு: ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலி காசா
    தரைத் தாக்குதலை முன்னிட்டு 1 லட்சம் பேரை ரஃபாவிலிருந்து வெளியேற்றுகிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    புதிய விமானம் தாங்கி கப்பலின் கடல் சோதனைகளை தொடங்கியது சீனா  சீனா
    2 ரஃபா பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல் இஸ்ரேல்

    உலக செய்திகள்

    உலக வெப்பம் அதிகரிப்பு: உலகம் முழுவதும் ஏப்ரல் 2024இல் அதிகபட்ச வெப்பநிலை பதிவு உலகம்
    ஆபாச நடிகையுடனான டொனால்ட் டிரம்பின் அந்தரங்க வாழ்க்கை அம்பலமானது அமெரிக்கா
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக அமெரிக்கா குற்றச்சாட்டு  இஸ்ரேல்
    மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் பலி அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025