அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா மக்களை அச்சுறுத்தும் வெப்ப அலை
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில், ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான இறப்புகளை ஏற்படுத்தக்கூடிய வெப்ப அலைகளின் அபாயகரமான சாத்தியம் குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க நகரங்கள், அவற்றின் கான்கிரீட் மற்றும் நிலக்கீல் உள்கட்டமைப்புடன், வெப்பத்தைப் பெருக்கி, வெளிப்புற வெப்பநிலையை கூடுதலாக ஆறு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். இந்த தகவலை ஜெஃப் குட்டெல், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பகிர்ந்துள்ளார்.
பாதிப்பு
காலநிலை மாற்றம் எரிசக்தி கட்டங்களை அச்சுறுத்துகிறது
காலநிலை மாற்றம் காரணமாக தீவிர வானிலை அதிகரிப்பு பல நகரங்களின் எரிசக்தி கட்டங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது.
இந்த சூழல் மேலும் மோசமடைந்தால், கடுமையான வெப்ப அலையின் போது ஏற்படக்கூடிய ஒரு இருட்டடிப்பு, ஒரு அமெரிக்க நகரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் நிலையான பொறியியலுக்கான மெடிஸ் மையத்தின் இயக்குனர் டாக்டர் மைக்கேல் செஸ்டர், அத்தகைய சூழ்நிலையை "தீவிர வெப்பத்தினை கத்ரீனா சூறாவளியுடன்" ஒப்பிட்டார்.
சுற்றுச்சூழல் அறிவியல் & தொழில்நுட்ப இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, பீனிக்ஸ் , டெட்ராய்ட் மற்றும் அட்லாண்டாவில் வெப்ப அலையின் போது இரண்டு நாள் இருட்டடிப்பு ஏற்படுவதற்கான சாத்தியமான விளைவுகளை ஆய்வு செய்தது.
ஆப்பிரிக்க வெப்ப அலைகள்
ஆப்பிரிக்கா வரலாறு காணாத வெப்ப அலைகளுடன் போராடுகிறது
ஆப்பிரிக்காவும் வரலாறு காணாத வெப்பத்தை அனுபவித்து வருகிறது. இந்த பிப்ரவரி உலகளவில் இதுவரை பதிவு செய்யப்படாத வெப்பமானதாகும்.
கண்டத்தின் தெற்கு பகுதி, பருவகால சராசரியை விட நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
அதே நேரத்தில் மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை ஒன்றிணைத்து 60 ° C ஐ விட வெப்பமாக உணரவைத்தது. ஜிபூட்டியின் ஜனாதிபதி இஸ்மாயில் ஓமர் குயெல்லே, இந்த வெப்ப அலைகள் காரணமாக Horn of Africa "வாழ முடியாத அபாயம் உள்ளது" என்று எச்சரித்தார்.
கென்யாவின் நைரோபியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பசுமையான பகுதிகளைக் கொண்ட இடங்களை விட அடர்ந்த சேரிகள் பல டிகிரி வெப்பமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.