Page Loader
நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம் 

நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம் 

எழுதியவர் Sindhuja SM
May 21, 2024
06:12 pm

செய்தி முன்னோட்டம்

லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் SIAL.SI விமானம் நடு வானில் ஆட்டம் கண்டதால் இன்று பாங்காக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, இதனால், அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவிக்கவில்லை. 30 பேர் காயமடைந்துள்ளதாக பல தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்களுடன் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது போயிங் 777-300ER விமானம் என்று அந்த விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து 

 உயிரிழந்த பயணியின் பெயர் வெளியிடப்படவில்லை

SQ321 விமானம் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையாக ஆட்டம் கண்டதால், ​​அது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களை மதிப்பிடுவதற்காக மருத்துவ பணியாளர்கள் விமானத்தில் ஏறியுள்ளனர் என்றும், ஆனால் எத்தனை பேருக்கு காயம் ஏற்பட்டது என்பதை எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் சில காயமடையாத பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர் என்று தாய்லாந்து குடிவரவு போலீசார் தெரிவித்தனர். ஆனால், உயிரிழந்த பயணியின் பெயர் வெளியிடப்படவில்லை. விமானம் தரையிறங்கியதும், சமிதிவேஜ் ஸ்ரீநகரின் மருத்துவமனையின் அவசரக் குழுவினர் காயமடைந்த பயணிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.