NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மறைந்த ஈரான் அதிபர் ரைசியின் மரணம் குறித்த முதல் அறிக்கை வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மறைந்த ஈரான் அதிபர் ரைசியின் மரணம் குறித்த முதல் அறிக்கை வெளியானது

    மறைந்த ஈரான் அதிபர் ரைசியின் மரணம் குறித்த முதல் அறிக்கை வெளியானது

    எழுதியவர் Venkatalakshmi V
    May 24, 2024
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அவருடன் பயணித்தவர்களின் மரணத்திற்கு வழிவகுத்த சமீபத்திய ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான முதல் விசாரணை அறிக்கையை ஈரானின் ஆயுதப் படைகளின் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    தஸ்னிம் செய்தி நிறுவனம், ரைசி பயணித்த ஹெலிகாப்டர், அதன் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வழியிலிருந்து விலகாமல் சென்றதாக அறிக்கையை மேற்கோளிட்டு செய்து வெளியிட்டுள்ளது.

    விமானி விபத்துக்கு சுமார் 90 வினாடிகளுக்கு முன்பு கான்வாயில் உள்ள மற்ற ஹெலிகாப்டர்களுடன் தொடர்பு கொள்ள முயன்றார் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    சேகரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் மிச்சங்களில் துப்பாக்கி தோட்டாக்களோ அல்லது அதுபோன்ற வெடி பொருட்களோ இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அந்த அறிக்கை உறுதிப்படுத்தியது.

    மீட்பு முயற்சிகள்

    சவாலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட விபத்து 

    கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்திற்கு ஜனாதிபதி ரைசி பயணம் செய்து கொண்டிருந்த போது தான் விபத்து ஏற்பட்டது.

    அவருடன் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜானின் ஈரானின் உச்ச தலைவர் முகமது அலி அலே-ஹஷேம் ஆகியோரும் பயணித்தனர்.

    அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் ஒரு மலையில் விழுந்ததைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் தீப்பிடித்தது.

    அங்கே நிலவிய மூடுபனி மற்றும் கடுங்குளிர் காரணமாக மீட்பு பணிகள் சிக்கலை சந்தித்தது.

    "திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:00 மணியளவில், ட்ரோன்களின் உதவியுடன், சம்பவம் நடந்த இடம் சரியாகக் கண்டறியப்பட்டது" என்று முதற்கட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

    ரைசியின் விமானக் குழுவினருக்கும் கண்காணிப்புக் கோபுரத்துக்கும் இடையே நடந்த உரையாடல்களில் சந்தேகத்திற்குரிய கூறுகள் எதுவும் புலனாய்வாளர்களால் கண்டறியப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    விபத்து

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    ஈரான்

    பாகிஸ்தான்-ஈரான் பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முன்வந்தது பாகிஸ்தான்  பாகிஸ்தான்
    சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்  அமெரிக்கா
    இந்திய சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் ஈரானுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் 4 நிபந்தனைகள்  சுற்றுலா
    இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல் இஸ்ரேல்

    விபத்து

    ஹைதராபாத்தில் குதிரையில் உணவு விநியோகம் செய்த ஸோமாட்டோ ஊழியர்- வைரல் வீடியோ சோமாட்டோ
    வீடியோ: பஞ்சாப் மாநிலத்தில் திடீரென்று மேம்பாலம் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு   பஞ்சாப்
    பெரும் விபத்தில் சிக்கியது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி சென்ற கார்  ஜம்மு காஷ்மீர்
    உல்லாசமாக துவங்கிய பள்ளி சுற்றுலா, துயரத்தில் முடிந்தது: 14 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த வதோதரா படகு விபத்து குஜராத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025