இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
வார இறுதி நாட்கள், கோயில் திருவிழாக்கள்-தமிழகம் முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகம் முழுவதும் வார இறுதி விடுமுறை நாட்கள், சுபமுகூர்த்த நாட்கள், கோயில் திருவிழா காலங்கள் என்பதன் காரணமாக தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம், இன்று(ஜூலை.,21) 600 சிறப்பு பேருந்துகளை இயக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூர்: அரை மணிநேரத்தில் தொடர்ந்து 3 நிலநடுக்கங்கள்
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று காலை அரை மணிநேரத்தில் அடுத்துதடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் கலவரம்: 4 பேர் கைது; முதல்வர் பதவி விலக மாட்டார் எனத்தகவல்
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நடந்து வருகிறது. மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரின் மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன.
பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறேன் - ஓ. பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.
மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்திய வீடியோ - ட்விட்டருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து, குகி பழங்குடியின மக்கள் போராட்டமாக துவங்கிய இந்த கலவரம், கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
டெல்லி ரோஹினி பகுதியில் உள்ள ஜிம்மில், டிரெட்மில்லில் ஓடும் போது மின்சாரம் தாக்கியதில், 24 வயது இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து இன்று(ஜூலை.,20) விடுவிக்கப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள்
இன்று காலை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.
நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில், தமிழக கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன: முதல்வர் பெருமிதம்
இந்தியா நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம்
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி என்னும் சமூகத்தினை சேர்ந்தோருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் போராட்டமாக துவங்கிய இந்த கலவரம் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
பழநி முருகன் கோயிலில் முடி காணிக்கை செய்தவர்களின் புகைப்படத்துடன் இலவச டிக்கெட்
பழனி முருகன் கோயிலில் திருவிழா நாட்களில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20,000க்கும் மேலான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவதால்,பக்தர்களின் வசதிக்கேற்ப கோயில் வளாகத்தில் 7 இடங்களில் மொட்டையடிக்கும் வசதி செய்துதரப்பட்டுள்ளது.
மணிப்பூர் பழங்குடியின பெண்கள் கற்பழிப்பு விவகாரம்: ஒருவர் கைது
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நடந்து வருகிறது. மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரின் மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த மோதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
"மணிப்பூர் சம்பவம் நாட்டிற்கே வெட்கக்கேடு; குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்": பிரதமர் மோடி
நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. அப்போது, மணிப்பூர் கலவரம், ஒடிசா ரயில் விபத்து, அதிகரிக்கும் விலைவாசி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராகியுள்ளன.
மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறையால் என் இதயம் நொறுங்கிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்
மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச்சேர்ந்த இரண்டு பெண்களை, மைதேயி சமூகத்தைச்சேர்ந்த ஆண்கள் குழு, ரோட்டில் நிர்வாணமாக இழுத்துச்செல்லும் வீடியோ, 2 தினங்களுக்கு முன்னர் சமூகவலைத்தளத்தில் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விலைவாசி உயர்வு, மணிப்பூர் விவகாரம்; பரப்பான சூழலில், இன்று முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கு முன்னர் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளியை தேடும் போலீஸ்
சென்னை, சைதாப்பேட்டை ரயில்நிலையத்தில் நேற்று இரவு ஒரு பெண்ணை, மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.
தமிழக முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வரும் ஜூலை 22ம் தேதி காலை 10.30 மணியளவில் அமைச்சரவை கூட்டமானது நடக்கவுள்ளது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
தமிழக ஆளுநரை திரும்ப பெறுவது குறித்து விவாதிக்க நோட்டீஸ் - எம்.பி., டி.ஆர்.பாலு
2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நாளை(ஜூலை.,20) டெல்லியில் துவங்கவுள்ளது.
நீட் தேர்வு: மீண்டும் மீண்டும் தேர்வு எழுதுவோரின் ஆதிக்கம்
முதல் முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களை விட, மீண்டும் மீண்டும் தேர்வு எழுதும் அதிகமானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆந்திராவில் தங்கத்திற்கு பதில் தக்காளியினை எடைக்கு எடை காணிக்கை கொடுத்த தம்பதி
தக்காளியின் விலை உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஆந்திரா மாநிலத்தில் 1 கிலோ தக்காளி தற்போது ரூ.120க்கு விற்பனையாகிறது.
கர்நாடக சட்டசபையில் அமளி துமளி: 10 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்
கர்நாடக சட்டப்பேரவையில் மசோதாக்களின் நகல்களை கிழித்து, துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி மீது வீசிய 10 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
6 மாத குழந்தையுடன் அதன் குடும்பத்தையும் கொன்று எரித்த கொடூர சம்பவம்
ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள செராய் கிராமத்தில் நேற்று(ஜூலை 19) இரவு ஆறு மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டு, அவர்களின் உடல்களுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து கட்சி கூட்டம் - அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் பங்கேற்பு
2023ம் ஆண்டின் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நாளை(ஜூலை.,20) டெல்லியில் துவங்கவுள்ளது.
தக்காளியின் விலை திடீர் சரிவு - வரத்து அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் உள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு
தமிழ்நாடு சிறை காவலர்களான முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கு, அவர்களது மிகை நேர பணிக்கான (Over Time Duty) ஊதியத்தினை உயர்த்துவதாக அண்மையில் அறிவிப்புகள் வெளியானது.
2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் 49 புதிய பாதிப்புகள்
நேற்று(ஜூலை 18) 34ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 49ஆக அதிகரித்துள்ளது.
உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள அலக்நந்தா ஆற்றங்கரையில் மின்மாற்றி வெடித்ததால் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் இன்று(ஜூலை 19) உயிரிழந்தனர்.
புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த ஜூலை 17ம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம்
டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுப்பாட்டில்களின் விலை ரூ.10 அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது.
தன் காதலனை தேடி இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் ஒரு உளவாளியா?
மே மாதம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானிய பெண் சீமா ஹைதர்(30) மற்றும் அவரது இந்திய காதலர் சச்சின் மீனா(22) ஆகியோரை உத்தரபிரதேச காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படை(ATS) இரண்டாவது முறையாக விசாரித்து வருகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் இரட்டிப்பாக உயர்வு
சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்கா, இந்தியாவின் சிறந்த உயிரியல் பூங்கா என்னும் அங்கீகாரத்தினையும், அதற்கான விருதினையும் அண்மையில் பெற்றுள்ளது.
மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள்
தமிழ்நாடு மாநிலத்தில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது அமலுக்கு வரவுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்
ஜூலை 20-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு இன்று(ஜூலை 19) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கைது
பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாத சந்தேக நபர்களை மத்திய குற்றப்பிரிவு(சிசிபி) போலீசார் இன்று(ஜூலை 19) கைது செய்தனர்.
தேர்தலின் போது தூர்தர்ஷனில் விளம்பரம் செய்ய டிஜிட்டல் வவுச்சர்கள் அறிமுகம்
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் ஆன்லைன் மூலம் டிஜிட்டல் நேர வவுச்சர்களைப் பெறுவார்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று(ஜூலை 19) அறிவித்தது.
"அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம் மும்பையில் நடைபெறும்": மல்லிகார்ஜுன கார்கே
2024ஆம் ஆண்டு பொது தேர்தலில் பாஜக கூட்டணி கட்சிகளை(NDA) எப்படி வீழ்த்துவது என்பதை திட்டமிட 26 எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று(ஜூலை 18) பெங்களூருவில் கூடினர்.
மல்யுத்த வீரர்கள் வழக்கு: பிரிஜ் பூஷனுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன்
பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், ஆறு பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக போடப்பட்ட வழக்கில், அவருக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக வானிலை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,