NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள்
    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இரு அவைகளின் நடவடிக்கைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன

    எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட அவைகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 20, 2023
    03:25 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று காலை நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

    ஏற்கனவே மணிப்பூர் விவகாரம், உயரும் விலைவாசி மற்றும் ஒடிஷா ரயில் விபத்து போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், மணிப்பூரில் பழங்குடியின இளம்பெண்கள் இருவரை நிர்வாணமாக அழைத்து சென்றதும், அவர்களை கூட்டு பலாத்காரம் செய்ததும் எதிர்கட்சியினரால் கண்டனத்திற்கு உள்ளாகவே, நாடாளுமன்றம் மதியம் 12 வரை ஒத்தி வைக்கப்பட்டது.

    மீண்டும் கூடிய அவையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. அவையின் மைய பகுதியில் வந்து கோஷமும் எழுப்பின. இதனால் மதியம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

    card 2

    நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் 

    இதன் பின்னர் மீண்டும் இரு அவைகளும் கூடியதும், மணிப்பூரில் பெண்களுக்கு நேரிட்ட கொடுமையை பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் நாளை காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    இந்நிலையில் அந்த வைரல் வீடியோவில், குற்ற சம்பத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அடையாளம் கண்டு, காவல்துறை கைது செய்திருப்பதாக மணிப்பூர் முதல்வர் தெரிவித்துள்ளார். மற்றவர்களை தேடும் பணியில் சிறப்பு காவலர்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் முன்னர், பிரதமர் மோடி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, "மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி, மன்னிக்கமுடியாதது, நாட்டிற்கே வெட்கக்கேடான விஷயம். இதில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவர்" எனக்கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    மணிப்பூர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    நாடாளுமன்றம்

    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி
    வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர் இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025