NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு 
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு

    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு 

    எழுதியவர் Nivetha P
    Jul 19, 2023
    02:43 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு சிறை காவலர்களான முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்களுக்கு, அவர்களது மிகை நேர பணிக்கான (Over Time Duty) ஊதியத்தினை உயர்த்துவதாக அண்மையில் அறிவிப்புகள் வெளியானது.

    தற்போது அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கான மிகை நேர பணிக்கான ஊதியம், ரூ.200ல் இருந்து ரூ.500ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, ரிஸ்க் அலவன்ஸ் (இடர் படி) ரூ.800ல் இருந்து ரூ.1000ஆக வழங்கப்படவுள்ளது என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்காக ரூ.3.24 கோடி நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஊதியம் 

    காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக ஊதிய உயர்வு  

    கடந்த ஏப்ரல் 27, நடந்த சட்டப்பேரவையில், சீர்திருத்த பணிகள் மற்றும் சிறைகள் உள்ளிட்ட துறையில் கீழ் அமைச்சர் ரகுபதி, ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.

    அதில் ஒன்று தான், இந்த சிறை காவலர்களுக்கான மிகை நேர ஊதிய உயர்வு ஆகும்.

    காவல்துறை ஆளிநர்களுக்கு இணையாக இந்த மிகை நேர பணிக்கான ஊதிய உயர்வு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டு கூறியிருந்தார்.

    மேலும் அவர், சீர்திருத்த பணிகள் மற்றும் சிறைகளின் நிர்வாகத்தினை மேம்படுத்தும் வகையில், சிறைத்துறை துணை தலைவர் என்னும் பதவியினை உயர்த்தி, சிறைத்துறை தலைவர் என்று பதவியின் தரத்தினையும் உயர்த்துவதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிறை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    கிரிக்கெட்டில் கோலியின் இறுதி கவுண்டவுன்: 2027 ஒருநாள் உலகக் கோப்பையுடன் முழுவதுமாக வெளியேற திட்டமா? விராட் கோலி
    கொரோனா பாதிப்புகளில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? கொரோனா
    அதிக மதிப்புள்ள சைபர் குற்றங்களுக்கு எதிராக இ-ஜீரோ எஃப்ஐஆர்; மத்திய உள்துறை அமைச்சகம் புதிய முயற்சி சைபர் கிரைம்
    "பாகிஸ்தானுடனான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை" என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தல் இந்தியா

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி

    காவல்துறை

    ராணுவ வீரர் மனைவி தாக்கப்பட்டதாக கூறிய விவகாரம் - ராணுவத்திற்கு அறிக்கை அனுப்பிய காவல்துறை  ஜம்மு காஷ்மீர்
    தமிழ்நாடு மாநிலத்தின் அடுத்த டிஜிபி யார் என டெல்லியில் ஆலோசனை கூட்டம்  தமிழ்நாடு
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை ரூ.4,500 கோடிக்கு விற்க முடிவு  தூத்துக்குடி
    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை  திண்டுக்கல்

    காவல்துறை

    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் போதைப்பொருள்
    ராணுவ வீரர் என்னும் பெயரில் க்யூஆர் கோடு மூலம் நூதன மோசடி - விழிப்புணர்வு வீடியோ  சைபர் கிரைம்
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை  அறநிலையத்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025