NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்
    சில நேரங்களில், பிரதமர் நரேந்திர மோடியும் இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்பார்.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று கூடுகிறது அனைத்து கட்சி கூட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 19, 2023
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    ஜூலை 20-ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு இன்று(ஜூலை 19) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

    பொதுவாக, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், இது போன்ற அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுவது வழக்கமாகும்.

    இந்த கூட்டத்தின் போது, அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் பங்கேற்று, பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார்கள்.

    சில நேரங்களில், பிரதமர் நரேந்திர மோடியும் இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்பார்.

    நேற்று ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் ஒரு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இருந்தார்.

    காய்ஜ்வ்

    எதிர்க்கட்சிகளுக்கும் பாஜக ஆதரவு கட்சிகளுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருகிறது

    ஆனால், பெரும்பாலான தலைவர்கள் பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திலும், புது டெல்லியில் நடைபெற்ற பாஜக கூட்டத்திலும் கலந்துகொள்ள சென்றுவிட்டதால், நேற்று ராஜ்யசபா தலைவர் ஜகதீப் தன்கர் கூட்டிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையில், பிரகலாத் ஜோஷி, பியூஷ் கோயல் உள்ளிட்ட தனது அமைச்சரவை சகாக்கள் சிலருடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று ஆலோசனை நடத்தினார்.

    இந்த கூட்டத்தில் தான் இன்று அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டது.

    எதிர்க்கட்சிகளுக்கும் பாஜக ஆதரவு கட்சிகளுக்கும் இடையே போட்டி அதிகரித்து வருவதால், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் சூடு பிடிக்கக்கூடும்.

    மணிப்பூர் பிரச்சனை, விலைவாசி உயர்வு, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது போன்ற பிரச்சனைகள் குறித்த கேள்விகளை காங்கிரஸும் மற்ற எதிர்கட்சிகளும் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாடாளுமன்றம்
    எதிர்க்கட்சிகள்
    பாஜக
    மத்திய அரசு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    நாடாளுமன்றம்

    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது டெல்லி

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பெங்களூர்
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  அரசியல் நிகழ்வு
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  சோனியா காந்தி

    பாஜக

    எங்களோடு இருப்பது தான் பாஜக'வுக்கு பலம் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  அதிமுக
    பாஜக -அதிமுக கூட்டணி நீடிக்குமா? அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக செயலாளர்கள் அதிமுக
    பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ்  இந்தியா
    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி

    மத்திய அரசு

    CoWIN தளத்தில் தகவல் கசிவு ஏற்பட்டது எப்படி? இந்தியா
    ட்விட்டரை இந்திய அரசு மிரட்டியதாக குற்றச்சாட்டு இந்தியா
    இந்தியாவில் 14 மருந்துகளின் விற்பனைக்கு தடை விதித்த மத்திய அரசு - அவகாசம் வழங்க மறுப்பு  தமிழ்நாடு
    தமிழக போக்குவரத்துத்துறைக்கு 150 தாழ்தள பேருந்துகள் உள்பட 600 புதிய பேருந்துகள்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025