NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மல்யுத்த வீரர்கள் வழக்கு: பிரிஜ் பூஷனுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மல்யுத்த வீரர்கள் வழக்கு: பிரிஜ் பூஷனுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன்
    அவரது செயலாளர் வினோத் தோமருக்கும் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    மல்யுத்த வீரர்கள் வழக்கு: பிரிஜ் பூஷனுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 18, 2023
    05:35 pm

    செய்தி முன்னோட்டம்

    பாஜக எம்பியும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், ஆறு பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக போடப்பட்ட வழக்கில், அவருக்கு டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    அவரது செயலாளர் வினோத் தோமருக்கும் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

    WFI தலைவர் பிரிஜ் பூஷன் மற்றும் வினோத் தோமர் ஆகியோரின் ஜாமீன் மீதான விசாரணை ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    அடுத்த விசாரணை தேதி வரை, ரூ.25,000 பிணையில் அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், பிரிஜ் பூஷன், தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் அனைத்தையும் மறுத்துள்ளார்.

    வித்

    "பிரிஜ் பூஷண் ஒரு நிரபராதி": வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதம் 

    "பிரிஜ் பூஷண் ஒரு நிரபராதி. அவர் மீதான குற்றப்பத்திரிகை பொய்கள் நிறைந்தது. அரசியல் சதியின் ஒரு பகுதியாக அது உள்ளது." என்று பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் நீதிமன்றத்தில் கூறினார்.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் எம்பியுமான பிரிஜ் பூஷன், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அவரை கைது செய்யக்கோரி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் டெல்லியில் பல நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    அந்த போராட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டிருந்தாலும், "எங்கள் போராட்டம் நீதிமன்றத்தில் தொடரும்" என்று போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.

    கடந்த 15ஆம் தேதி பிரிஜ் பூஷனுக்கு எதிராக 1000 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி போலீஸார் தாக்கல் செய்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    மல்யுத்த வீரர்கள்
    பிரிஜ் பூஷன் சரண் சிங்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    டெல்லி

    ஜூன் 15க்குள் பாலியல் புகார் விசாரணை முடிவு! இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல்! அனுராக் தாக்கூர் அறிவிப்பு! மல்யுத்த வீரர்கள்
    டெல்லி விமான நிலைய பயணிகள் DigiYatraவை பதிவிறக்கம் செய்யாமலேயே இனி பயன்படுத்தலாம்  இந்தியா
    காவல்துறை அதிகாரியிடமே ரூ.2 லட்சத்தை மோசடி செய்த ஆன்லைன் மோசடி கும்பல்! ஆன்லைன் மோசடி
    குருக்ஷேத்ரா-டெல்லி நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் இந்தியா

    மல்யுத்த வீரர்கள்

    பிரிஜ் பூஷன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: பிரதமரிடம் பிரியங்கா காந்தி கேள்வி இந்தியா
    மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீரர்கள் கூட்டாக அறிக்கை! இந்திய அணி
    ஜூன் 9க்குள் மல்யுத்த அமைப்பின் தலைவரை கைது செய்யுங்கள்: விவசாயி தலைவர்கள் எச்சரிக்கை  இந்தியா
    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மல்யுத்த வீரர்கள் தங்கள் ரயில்வே பணிக்கு திரும்பினர்  இந்தியா

    பிரிஜ் பூஷன் சரண் சிங்

     மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு   இந்தியா
    விளையாட்டுத்துறை அமைச்சரிடம் மல்யுத்த வீரர்கள் கோரிய 5 கோரிக்கைகள்  இந்தியா
    இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பிற்கு ஜூலை 4இல் தேர்தல் மல்யுத்தம்
    பிரிஜ் பூஷண் வழக்கு: 5 நாடுகளிடம் உதவி கோரி இருக்கும் டெல்லி போலீஸ்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025