NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் இரட்டிப்பாக உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் இரட்டிப்பாக உயர்வு 
    வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் இரட்டிப்பாக உயர்வு

    வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் இரட்டிப்பாக உயர்வு 

    எழுதியவர் Nivetha P
    Jul 19, 2023
    12:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்கா, இந்தியாவின் சிறந்த உயிரியல் பூங்கா என்னும் அங்கீகாரத்தினையும், அதற்கான விருதினையும் அண்மையில் பெற்றுள்ளது.

    இந்த பூங்காவிற்கு சராசரியாக வார நாட்களில் 2000-3000பேர் வரை வந்து செல்லும் நிலையில், வாரயிறுதி நாட்களில். கிட்டத்தட்ட 10,000 சுற்றுலா பயணிகள் வரை வருகிறார்கள்.

    602 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவில் 2,400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதில் 42 வகை விலங்குகள் மாமிசம் உண்ணும் வகையினை சேர்ந்ததாம்.

    இந்நிலையில், தற்போது இந்த பூங்காவினை சுற்றிப்பார்க்க நுழைவு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதன் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு ரூ.200 வசூலிக்கப்படவுள்ளது என்று அரசு தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது.

    4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    கட்டணம் 

    குடும்பத்துடன் பேட்டரி காரில் சுற்றிப்பார்க்க ரூ.1550 கட்டணம்

    பூங்காவிற்குள் கேமரா எடுத்து செல்வதற்கான கட்டணம் ரூ.25ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பூங்காவிற்குள் பேட்டரி காரில் சுற்றிப்பார்க்க ரூ.1550கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாம்.

    இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் மூலம், பூங்காவினை மேம்படுத்தலாம் என்று அதிகாரியொருவர் கூறியதாக தெரிகிறது.

    விலங்குகள் பரிமாற்றம் செய்ததன் மூலம் தற்போது சிங்கங்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதேபோல் வரிக்குதிரைகள், ஒட்டகச்சிவிங்கி, காட்டுக்கழுதைகள் உள்ளிட்டவைகளும் சேர்க்கப்படவுள்ளது என்று தெரிகிறது.

    இப்பூங்காவில் உள்ள விலங்குகளுக்கான உணவிற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.6கோடி செலவாகும் பட்சத்தில், பராமரிப்பு பணிகள், அங்கு பணிபுரிவோருக்கான சம்பளம் ஆகியவற்றிற்கு ரூ.7கோடி செலவாகிறது என்றும் கூறப்படுகிறது.

    இக்கட்டண உயர்வு குறித்து மக்கள், கட்டண உயர்வு சற்று அதிகம்தான் என்றும், 5 பேர் கொண்ட குடும்பம் இங்கு வந்தால் ரூ.3000வரை செலவாகும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சுற்றுலா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு  மேயர் பிரியா
    நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு  இந்தியா
    சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை  திருப்பதி
    தக்காளி, பீன்ஸ், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வு  கோடை காலம்

    சுற்றுலா

    கிரீஸிற்க்கு சுற்றுலா செல்கிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இதோ உலகம்
    ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்! ரயில்கள்
    இந்தியர்களே விண்வெளிக்கு பறக்க ஆசையா? 2030 ஆண்டிற்குள் விண்வெளி சுற்றுலா திட்டம் விண்வெளி
    இந்திய பாஸ்போர்ட் மட்டும் போதும், இந்த நாடுகளுக்கு விசா இல்லாமலே பயணிக்கலாம்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025