NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் 
    தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் விலைவாசி உயர்வினை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 20, 2023
    02:22 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து தமிழகத்தினை ஆளும் திமுக கட்சிக்கு எதிர்ப்புத்தெரிவித்து எதிர்கட்சியான அதிமுக சார்பில் இன்று(ஜூலை.,20)தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இது குறித்த அறிவிப்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

    இதற்கான அறிவிப்பினை முன்னதாக வெளியிட்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி, "விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக தமிழக மக்கள் வாழ்வானது கேள்விக்குறியாகி உள்ளது. சமையலுக்கு அன்றாடம் தேவைப்படும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலையேற்றம் மக்களை கடுமையாக பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    ஆர்ப்பாட்டம் 

    விலை உயர்வினை கட்டுப்படுத்த கோரிக்கை 

    மேலும் அவர், குறைந்த விலையில் பொருட்களை நியாயவிலை கடைகளில் விற்பனை செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் ஆளுங்கட்சி அதனை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கடும் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரமக்கள் தமிழகத்தில் வாழவே முடியாது என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் கூறியுள்ளார்.

    தொடர்ந்து, மக்கள் நலனை மட்டுமே முன்வைத்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடக்கவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    அதன்படி தற்போது சென்னையில் ஜெயக்குமார், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது.

    அதேபோல் மதுரையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

    தமிழகத்தில் விலையுயர்வினை கட்டுப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி, அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்திவருகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திமுக
    எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில் முதலீடு
    தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு  சென்னை
    எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்பத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு  மருத்துவ ஆராய்ச்சி
    தமிழக ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு புகார் கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    திமுக

    பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு  மத்திய அரசு
    ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது - அமைச்சர் மா.சுப்ரமணியம்  தமிழக அரசு
    கவர்னர் மாளிகையினை நோக்கி எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் அதிமுக பேரணி  அதிமுக
    திமுக கட்சியிலிருந்து மிசா பாண்டியன் சஸ்பெண்ட் - பின்னணி குறித்த தகவல்கள்  நிதி அமைச்சர்

    எடப்பாடி கே பழனிசாமி

    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி அதிமுக
    ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு தேர்தல்
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு

    அதிமுக

    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு ஓ.பன்னீர் செல்வம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025