NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள் 
    மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள்

    மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள் 

    எழுதியவர் Nivetha P
    Jul 19, 2023
    11:58 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமானது அமலுக்கு வரவுள்ளது.

    அதற்காக தகுதியான பெண்களை தேர்ந்தெடுக்கும் பணியானது தற்போது மும்முரமாக நடத்தப்படவுள்ளது.

    அதன்படி, இந்த திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாம்களை 2 கட்டங்களாக நடத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்து அதுகுறித்த அறிவிப்பு ஒன்றினையும் அண்மையில் வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், "மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடக்கவுள்ள நிலையில், இதற்கான முதல் கட்ட முகாம்கள் வரும் ஜூலை 24ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடக்கும். அதே போல் 2ம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கி ஆகஸ்ட்.,16ம் தேதி நடக்கவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பம் 

    விண்ணப்பங்கள் முகாம்கள் நடக்கும் 4 நாட்கள் முன்னதாக வழங்கப்படும் 

    மேலும் இந்த விண்ணப்பத்தினை பதிவு செய்கையில் வருமான சான்றிதழ் போன்ற எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து, நியாயவிலைக்கடை பணியாளர்கள் முகாம்கள் நடக்கும் 4 நாட்கள் முன்னதாக வீடுவீடாக சென்று விண்ணப்பங்களை வழங்குவர் என்றும், அதில் முகாம்கள் நடக்கும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் தங்கள் ரேஷன் கார்டிற்காக ஒதுக்கப்பட்ட நியாயவிலை கடைகளில் மட்டுமே இந்த விண்ணப்பத்தினை பதிவு செய்யவேண்டும்.

    இந்த விண்ணப்ப பதிவானது ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இதுத்தொடர்பான சந்தேகங்களுக்கு 044-259619208 என்னும் எண்ணினை தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தொடர்ந்து இந்த விண்ணப்பங்களை பெற மக்கள் நியாயவிலைக்கடைகளுக்கு வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்
    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா

    சென்னை

    50 ஆண்டுகளை பூர்த்தி செய்த சென்னை அண்ணா மேம்பாலம்  கருணாநிதி
    சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு  மேயர் பிரியா
    நாளை சர்வதேச பிரியாணி தினம் - ஸ்விகி நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பு  இந்தியா
    சென்னையில் இருந்து திருப்பதிக்கு புதிய வந்தே பாரத் ரயில் சேவை  திருப்பதி

    தமிழ்நாடு

    Co-Op Bazaar: கூட்டுறவு தயாரிப்புகளை சந்தைப்படுத்த புதிய செயலி அறிமுகம்  முதல் அமைச்சர்
    'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல் நீட் தேர்வு
    பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள் திமுக
    உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை  உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025