NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு 
    புழல் சிறையில் செந்தில் பாலாஜி - அவரின் உணவு பட்டியல் வெளியானது

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு 

    எழுதியவர் Nivetha P
    Jul 19, 2023
    01:40 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த ஜூலை 17ம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    108 ஆம்புலன்ஸ் மூலம் சிறைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, நீதிமன்ற உத்தரவின்படி, அங்குள்ள மருத்துவர்கள் அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.

    தொடர்ந்து அவரது உடல்நிலை தேறிய பின்னர், விசாரணை கைதிகளுக்கான தனி சிறை அறையில் தங்க வைக்கப்படுவார் என்று தெரிகிறது.

    அங்கு அவருக்கு, மெத்தை, நாற்காலி, மேஜை, மேற்கத்தியக்கழிவறை, கொசுவலை, உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது என்றும், அவருடன் 24 மணிநேரமும் இருக்க முதல்நிலை காவலர் மற்றும் உதவி ஜெயிலர் ரேங்க் அளவிலான 2 பேர் நியமிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது.

    உணவு 

    காலை, மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்ட செந்தில் பாலாஜி 

    இதனிடையே, சிறையில் அவருக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

    அதன்படி அவருக்கு காலை உணவாக ப்ரெட், பழங்கள் மற்றும் மாதுளை ஜூஸ் கொடுக்கப்படுகிறதாம்.

    அதனை தொடர்ந்து, மதிய உணவாக, தயிர் சாதம் கொடுக்கப்படுகிறதாம்.

    அதோடு மாலை நேர சிற்றுண்டியாக, பச்சை பயறு வழங்கப்படும். இரவுநேர உணவாக பால், இடியாப்பம், வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    மேலும் நேற்று(ஜூலை.,18) காலை 20 நிமிஷம் நடைப்பயிற்சி மேற்கொண்ட செந்தில் பாலாஜி, பின்னர் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் மாலை நேரத்திலும் தனது நடைபயிற்சியினை மேற்கொண்டுள்ளார்.

    அங்குள்ள மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் அமைச்சர் வைக்கப்பட்டுள்ள நிலையில், முதல்நாள் அவர் பிற கைதிகளோடு பேசுவதினை தவிர்த்து கொண்டார் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு செய்தி
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025