NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி 
    காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தற்போது புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி

    புழல் சிறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 17, 2023
    05:47 pm

    செய்தி முன்னோட்டம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, புழல் சிறைக்கு இன்று மாற்றப்பட்டுள்ளார்.

    அவருக்கு மேற்கொண்டு தேவைப்படும் சிகிச்சைகள் அனைத்தும், புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என, நீதிமன்ற உதவியை நாடினர்.

    அதன்பிறகு, அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

    இதற்கிடையே, அவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதனிடையே, அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில், அமர்வு நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்ததை அடுத்து, மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டார்.

    card 2

    கைது செல்லும் என அறிவித்த அமர்வு நீதிபதி

    இந்த மூன்றாவது நீதிபதி, சென்ற வாரம், பாலாஜியை அமலாக்கத்துறை சட்டப்படியே கைது செய்துள்ளது என்றும், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    செந்தில் பாலாஜி, தான் குற்றமற்றவர் என விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் எனவும், கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம் என்றும் உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவில், மருத்துவமனை சிகிச்சைக்கு பின், அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டு, தேவைப்பட்டால், அங்கே சிகிச்சையை தொடரலாம் எனவும், வரும் 26ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு செய்தி
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் விழுப்புரம்
    RSS பேரணி தொடர்பான வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக
    தமிழக அரசை மிரட்டும் வகையில் பேசிய முன்னாள் ராணுவ கர்னல் மன்னிப்பு கோரியதால் முன்ஜாமீன் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025