NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம் 
    நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம்

    நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 19, 2023
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுப்பாட்டில்களின் விலை ரூ.10 அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது.

    இந்நிலையில், இது குறித்து டாஸ்மாக் நிர்வாக மேலாண் இயக்குனர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.

    அந்த சுற்றறிக்கையின்படி, தமிழ்நாடு மாநில வாணிப கழகம்-மதுபான சில்லரை விற்பனை கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி-விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் கடமையினை தவறி மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள MRP விலையினை விட கூடுதலாக விற்பனை செய்யும் பட்சத்தில், துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதனிடையே மதுபானங்களை 'டெட்ராபேக்' மூலம் விற்பனை செய்ய தமிழகத்தினை சேர்ந்த 4 விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, அமைச்சர் சு.முத்துசாமிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளனர்.

    டெட்ராபேக் 

    'டெட்ராபேக்' விற்பனைக்கு ஆறுதல் தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள்  

    அதன்படி, மதுபானங்கள் தற்போது கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    அந்த காலிபாட்டில்களை, மது அருந்துவோர் கண்ட இடங்களில் போட்டுவிடுகிறார்கள்.

    குறிப்பாக கிராமப்புறங்களில் பாசனக்கால்வாய் உள்ள பகுதிகள், வேளாண் விளைநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த மதுபான பாட்டில்களை அதிகம் காணமுடியும்.

    இவ்வாறு எறியப்படும் கண்ணாடிப்பாட்டில்கள், வேளாண் வேலைச்செய்யும் பணியாளர்கள் கால்களை குத்தி கிழிப்பதோடு, நெல் அறுவடை செய்கையில் இயந்திரம் மூலம் நெல்லொடு சேகரிக்கப்படுகிறது.

    அந்த கண்ணாடித்துகள்கள் நொறுங்கிய நிலையில் அரிசியிலும் கலப்பதாக பல்வேறு புகார்கள் எழுகிறது.

    இத்தகைய கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த காண்ணாடி பாட்டில்களை தவிர்த்து தமிழக அரசு கருத்து தெரிவித்து வரும் இந்த மக்கக்கூடிய அட்டை பாட்டில்கள்(டெட்ராபேக்)மூலம் மதுக்களை விற்பனை செய்யலாம் என்பதை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாஸ்மாக்
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு

    டாஸ்மாக்

    500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி மது
    தமிழகத்தில் 500 சில்லறை மதுபான கடைகள் மூடப்படும் - டாஸ்மாக் நிர்வாகம்  தமிழ்நாடு
    டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை - அமைச்சர் முத்துசாமி விளக்கம்  தமிழ்நாடு

    தமிழ்நாடு

    'NEET' -ஐ தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கு அடுத்த தேர்வு 'NExT'- இந்தாண்டு முதல் அமல் நீட் தேர்வு
    பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை - பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு முகாம்கள் திமுக
    உத்தரகாண்ட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.250க்கு விற்பனை  உத்தரகாண்ட்
    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் தமிழ்நாடு செய்தி

    தமிழக அரசு

    தமிழ்நாடு பாடப்புத்தகங்களில் சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கம்  தமிழ்நாடு
    தமிழகத்தில் வேலைவாய்ப்புக்கான பதிவு எண்ணிக்கை 66.70 லட்சம்  தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை
    தமிழகத்தில் எங்கும் மின்தடை இல்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி  கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025