NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் பழங்குடியின பெண்கள் கற்பழிப்பு விவகாரம்: ஒருவர் கைது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் பழங்குடியின பெண்கள் கற்பழிப்பு விவகாரம்: ஒருவர் கைது 
    அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் மணிப்பூர் முதலமைச்சர்

    மணிப்பூர் பழங்குடியின பெண்கள் கற்பழிப்பு விவகாரம்: ஒருவர் கைது 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 20, 2023
    11:43 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நடந்து வருகிறது. மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரின் மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன. இதுவரை நடந்த மோதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    அதன் உச்சகட்டமாக நேற்று ஒரு வீடியோ வெளியானது.

    அதில், இரண்டு பழங்குடியின இளம் பெண்களை, ஆண்கள் கும்பல் ஒன்று நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற காட்சி உள்ளது. மேலும் அப்பெண்களை, அந்த கும்பல், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது.

    நாடு முழுவதும் கொந்தளிப்பை உண்டாக்கிய இந்த விவகாரம், உச்ச நீதிமன்ற நீதிபதி முதல் மத்திய அரசின் அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி வரை பலராலும் கண்டிக்கப்பட்டது.

    card 2

    குற்றவாளி என கருதப்படும் ஒருவர் கைது

    இந்த சம்பவத்தை அடுத்து, மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் பதவி விலக வேண்டும் என கோரிக்கையும் வலுத்து வருகிறது.

    வன்முறையை கட்டுக்குள் கொண்டு வராதது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், அந்த வீடியோ பதிவில் இருக்கும் ஆதாரத்தை வைத்து, பச்சை நிற சட்டை அணிந்து இருந்தவர் அடையாளம் காணப்பட்டு, அவரை மணிப்பூர் காவல் துறை கைது செய்துள்ளதாக முதல்வர் பைரேன் சிங் தெரிவித்துள்ளார்.

    கைது செய்யப்பட்டவர், தௌபால் மாவட்டத்தை சேர்ந்த ஹெரதாஸ் எனவும், அவர் தான் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி எனவும் கூறப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளை பிடிக்க சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    கைது

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு  உச்ச நீதிமன்றம்
    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025