ஐநா சபை: செய்தி

20 Nov 2023

காசா

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு

சுற்றி வளைக்கப்பட்ட காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள், மீட்பு பணிகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

12 Nov 2023

இஸ்ரேல்

இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா 

பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 145 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

10 Nov 2023

காசா

காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு

வடக்கு காசா பகுதிகளில், இஸ்ரேல் தினமும் 4 மணி நேர போர் இடை நிறுத்தத்தை தொடங்கும் என, அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

07 Nov 2023

காசா

காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி

காசா மீதான போரை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு "உண்மையான எதிர்காலத்தை" வழங்குவதாக தெரிவித்துள்ளது.

03 Nov 2023

ஹமாஸ்

காசா, மேற்குகரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும்

மனிதாபிமானப் பணிகளை ஒருங்கிணைக்கும் ஐநா அலுவலகம், காசா, மேற்கு கரையில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய $1.2 பில்லியன் தேவைப்படும் என கூறியுள்ளது.

02 Nov 2023

இஸ்ரேல்

அகதிகள் முகாம் மீதான இஸ்ரேல் தாக்குதல் போர் குற்றத்திற்கு சமமானது

காசாவில் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது, போர் குற்றத்திற்கு சமமானது என ஐநா மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

01 Nov 2023

இஸ்ரேல்

ஐநா மனித உரிமைகள் அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குநர் ராஜினாமா

காசாவில் இன அழிப்பை தடுக்க முடியாத, ஐநா மனித உரிமைகள் அமைப்பை கண்டித்து, அந்த அமைப்பின் நியூயார்க் அலுவலகத்தின் இயக்குனர் கிரேக் மொகிபர் ராஜினாமா செய்துள்ளார்.

29 Oct 2023

இஸ்ரேல்

காசாவில் ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்து நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற பாலஸ்தீனியர்கள்

காசாவில் உள்ள ஐநா உதவி கிடங்குகளுக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், அங்கு இருந்த அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் சென்றதாக, பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா நிவாரண நிறுவனம் (UNRWA) கூறுகிறது.

28 Oct 2023

இந்தியா

இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்திற்கு ஐநா பொதுச் சபையில் இந்தியா வாக்களிக்கவில்லை.

26 Oct 2023

இந்தியா

2025ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறையும்: ஐநா கணிப்பு 

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள இந்தோ-கங்கைப் படுகையில் உள்ள சில பகுதிகளில் ஏற்கனவே நிலத்தடி நீர் வீழ்ச்சி நிலையை அடைந்துவிட்டன.

எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம்

காசாவில் எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால் அங்கு இயங்கி வரும், பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் விரைவில் மூடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தாக்குதலை நிறுத்தக் கோரிய ஐநாவின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்: ஐநா பொதுச் செயலாளரை பதிவி விலகவும் கோரிக்கை

அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் தொடர்ந்ததையடுத்து, 19வது நாளாக இரு நாடுகளுக்கு இடையேயான போர் நீடித்து வருகிறது.

22 Oct 2023

இஸ்ரேல்

காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளன- ஐநா

இஸ்ரேல், காசாவுக்கு செல்லும் மின்சாரம், எரிபொருள் உள்ளிட்டவற்றை துண்டித்து விட்ட நிலையில், காசாவில் இன்குபேட்டரில் உள்ள 120 குழந்தைகள் ஆபத்தில் உள்ளதாக ஐநாவின் குழந்தைகள் அமைப்பு எச்சரித்துள்ளது.

ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்

போரால் பாதிப்படைந்துள்ள காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்லும், எகிப்து-காசா எல்லையான ரஃபா எல்லையை, ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் பார்வையிட்டார்.

15 Oct 2023

இஸ்ரேல்

இஸ்ரேல் பாலஸ்தீனப் போர்- அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த இஸ்லாமிய நாடுகள்

இஸ்ரேல் பாலஸ்தீனியம் இடையான போர் குறித்து ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகளின் குழுவான 'இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு' தலைமையில், சவுதி அரேபியாவில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

13 Oct 2023

இஸ்ரேல்

24 மணிநேர கெடு: 11 லட்சம் காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

காஸா பகுதிக்கு வடக்கில் வாழும் அனைவரையும் தெற்கு நோக்கி, 24 மணி நேரத்தில் வெளியேற, இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளதாக ஐநா சபை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்து இஸ்ரேலுக்கு கணடனம் தெரிவித்தது பாகிஸ்தான் 

ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் துணை நிரந்தர பிரதிநிதி ஜமான் மெஹ்தி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில்(UNHRC) உறுப்பினர்களிடம் உரையாற்றும் போது, ​​ஹமாஸ் குழுவுடனான தற்போதைய மோதல் குறித்து இஸ்ரேலை கடுமையாக சாடினார்.

10 Oct 2023

இஸ்ரேல்

பாலஸ்தீன மக்கள் வாழும் காசா பகுதியில் என்ன தான் பிரச்சனை?

2014ஆம் ஆண்டு முதல் 187,518 பேர் காசாவில் உள்ள தங்கள் வீடுகளை காலி செய்துள்ளதாக ஐநா சபையின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது,

08 Oct 2023

இஸ்ரேல்

'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு

பாலஸ்தீனிய போராளிக் குழுவான ஹமாஸால் இஸ்ரேலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை இன்று கண்டித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர், அந்த தாக்குதலை 9/11 பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டுள்ளார்.

01 Oct 2023

இந்தியா

அமெரிக்க-இந்திய உறவுக்கான அளவை வகுப்பது மிகவும் கடினம்- வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு

அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவுக்கான அளவை வகுப்பது கடினம் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியுள்ளார்.

28 Sep 2023

இந்தியா

இந்தியாவில் அதிகரிக்கும் வயதானவர்களின் எண்ணிக்கை, வெளியானது இந்திய முதுமை அறிக்கை!

2023ம் ஆண்டு 'இந்திய முதுமை அறிக்கை'யை வெளியிட்டிருக்கிறது ஐநா மக்கள்தொகை நிதியம். மக்கள் தொகை அறிவியலுக்கான சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து இந்த அறிக்கையை தயாரித்திருக்கிறது அந்த அமைப்பு.

கனடாவுடன் மோதல்; ஐநா சபையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜெய்சங்கர் உரை

காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியா மற்றும் கனடா இடையே உறவு கடுமையாக சீர்குலைந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் நாளை நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையில் ஆற்றும் உரையை நோக்கி அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

23 Sep 2023

இந்தியா

'காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்': ஐநா சபையில் வைத்து பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

நேற்று ஐநா சபையில் பேசிய இந்தியா, காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும் என்றும் கூறி பாகிஸ்தானை கடுமையாக சாடியது.

20 Sep 2023

இந்தியா

பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர் 

செவ்வாயன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 54வது அமர்வில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை ஒரு காஷ்மீரி சமூக-அரசியல் ஆர்வலர் கடுமையாக சாடினார்.

15 Sep 2023

உலகம்

உலகளவில் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் 700 மில்லியன் மக்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு முகமையின் தலைவர், 700 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் கடுமையான உலகளாவிய பசி நெருக்கடி பற்றி எச்சரித்துள்ளார்.

07 Sep 2023

இந்தியா

இந்தியா - பாரத்: ஐநா சபை ஓப்புதல் எவ்வாறு பெறப்படும்?

ஜனாதிபதி திரௌபதி முர்முவின், ஜி20 விருந்துக்கு 'இந்தியாவின் ஜனாதிபதி' என்பதற்குப் பதிலாக 'பாரதத்தின் குடியரசுத் தலைவர்' என்று குறிப்பிட்டது தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து, இந்தியாவின் பெயரை மாற்றவிருப்பதாக செய்திகள் வெளியானது.

தேசிய ஊட்டச்சத்து வாரத்தை 'Glance ஃபுட் ஃபேருடன்' கொண்டாடுங்கள் 

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் லாக் ஸ்கிரீன் தளமான Glance, தேசிய ஊட்டச்சத்து வாரத்தை கொண்டாடுவதற்காக "Glance ஃபுட் ஃபேர்" என்ற பரப்புரையை தொடங்கியுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

08 Jul 2023

உக்ரைன்

உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா

500 நாட்களாகியும் முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் உக்ரைன்-ரஷ்ய போரால் ஏற்பட்டிருக்கும் மனித இழப்புகளை ஐநா சபை கடுமையாக கண்டித்துள்ளது.

06 Jul 2023

ஜப்பான்

ஜப்பான் புகுஷிமா அணுமின்நிலைய கழிவுநீரை கடலில் கலக்க ஐ.நா. அனுமதி; சீனா எதிர்ப்பு

ஜப்பான் நாட்டில் உள்ள புகுஷிமா அணுமின் நிலையம், சுனாமியால் பாதிக்கப்பட்டது. அந்த அணுமின் நிலையத்தில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவுநீரை, பசிபிக் பெருங்கடலில் வெளியிடுவதற்கான ஜப்பானின் திட்டத்திற்கு, ஐநா சபை ஒப்புதல் அளித்துள்ளது.

"பதிப்புரிமை மற்றும் காப்புரிமைகள் இல்லாதது யோகா" : பிரதமர் மோடி

ஐநா சபையில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யோகா இந்தியாவில் உருவானது என்றாலும், அதற்கு பதிப்புரிமையும் காப்புரிமையும் கிடையாது என்று கூறினார்.

ஐநா சபை நடத்திய யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார் பிரதமர் மோடி

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

16 Jun 2023

இந்தியா

ஐநா சபையின் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு தலைமை தாங்குகிறார் பிரதமர் மோடி

ஜூன் 21 ஆம் தேதி ஐநா தலைமையகத்தில் நடைபெற இருக்கும் 9 வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்க இருக்கிறார்.

17 May 2023

உலகம்

அடுத்த ஐந்தாண்டுகளில் வரலாறு காணாத அளவு வெப்பம் அதிகரிக்கும்: ஐநா 

பசுமை இல்ல வாயுக்களும் எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை உயர்த்துவதால், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது.

நெகிழி மாசுபாட்டைக் குறைக்க புதிய வழிமுறைகள்.. ஐநா அறிக்கை!

உலகில் நெகிழி மாசுபாட்டைக் (Plastic Pollution) குறைப்பதற்கான புதிய திட்டங்கள் சிலவற்றை தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ஐநா. அதனைப் பின்பற்றுவதன் மூலம் 2040-ம் ஆண்டிற்குள் 80% வரை நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா.

06 May 2023

உலகம்

எல் நினோ என்றால் என்ன; அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது

வரும் மாதங்களில் எல் நினோ எனப்படும் வானிலை நிகழ்வு உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும், இதனால் உலக வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு(WMO) எச்சரித்துள்ளது.

24 Apr 2023

உலகம்

சூடான் சண்டையால் அதிகம் பாதிக்கப்படும் குழந்தைகள்: ஐநா 

சூடானில் தற்போது நடந்து வரும் சண்டையால் இதுவரை 413 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.

19 Apr 2023

இந்தியா

மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை 

சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறியுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை இன்று(ஏப் 19) தெரிவித்துள்ளது.

22 Mar 2023

உலகம்

உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை

அதிக பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் உலகெங்கிலும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை ஒரு அறிக்கையில் எச்சரித்துள்ளது.

நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார்

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நித்யானந்தா தனது தாய் நாடான இந்தியாவால் தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறார் என்று கைலாசா பிரதிநிதியான அவருடைய சிஷ்யை ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 8,400 பேர் உயிரிழந்தனர்.

முந்தைய
அடுத்தது