NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி
    ஏபிசி தொலைக்காட்சிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த சமீபத்திய நேர்காணலில், போர் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். படம்- ஏபிசி

    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி

    எழுதியவர் Srinath r
    Nov 07, 2023
    11:05 am

    செய்தி முன்னோட்டம்

    காசா மீதான போரை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு "உண்மையான எதிர்காலத்தை" வழங்குவதாக தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் பாலஸ்தீன போர், 32வது நாளாக நீடித்து வரும் சூழ்நிலையில், தற்போது வரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து பேசியுள்ள பெஞ்சமின் நெதன்யாகு, "நாங்கள் ஹமாஸை தோற்கடிப்போம்",

    "காஸா மக்களுக்கும், மத்திய கிழக்கு மக்களுக்கும் உண்மையான எதிர்காலத்தை, நம்பிக்கையின் எதிர்காலத்தை வழங்குவோம். ஆனால் இதற்கு வெற்றி தேவை" என சமீபத்திய நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார்.

    2nd card

    போர் இடைநிறுத்தம் குறித்து பேசிய நெதன்யாகு

    மேலும் பேசியவர், போருக்குப் பிறகு "காலவரையற்ற காலத்திற்கு" இஸ்ரேலுக்கு, பாலஸ்தீனத்தில் பாதுகாப்புக்கான பொறுப்பு இருப்பதாக அவர் நினைப்பதாக தெரிவித்தார்.

    மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போரில் இடைநிறுத்தம் விட இஸ்ரேலை வலியுறுத்தி வருவதற்கு பதில் அளித்தவர்,

    " ஒரு மணி நேரம் போன்ற சிறிய இடைநிறுத்தங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே அவற்றைப் வழங்கியுள்ளோம்",

    "அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் செல்வதற்கும், இஸ்ரேல் பணயக் கைதிகள் மற்றும் தனிப்பட்ட பணயக் கைதிகள் வெளியேறுவதற்கும் சூழ்நிலைகளை சரிபார்ப்போம் என்று நினைக்கிறேன்"

    "ஆனால் ஒரு பொதுவான போர்நிறுத்தம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என அவர் தெரிவித்தார்.

    3rd card

    போர் நிறுத்தம் கோரும் ஐநா அமைப்பு

    காசாவில் இருக்கும் சர்வதேச அமைப்புகள், மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவம் பார்க்க போதிய பொருட்கள் இல்லை எனவும், உணவு, சுகாதாரமான குடிநீர் உள்ளிட்டவை பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    "எங்களுக்கு உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் தேவை. போர் தொடங்கி 30 நாட்கள் ஆகிவிட்டது. இது இப்போது நிறுத்தப்பட வேண்டும்"

    என மனித உரிமைகளுக்கான ஐநா உயர் ஆணையர் வோல்கர் டர்க், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,

    ஐநா உதவித் தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் மற்றும் பல்வேறு ஐக்கிய நாடுகளின் சபையின் உயர் அதிகாரிகள் இடமிருந்து வந்த அறிக்கை தெரிவித்தது.

    மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மனிதாபிமான உதவிகளை காசாவிற்கு அனுப்ப போரில் இடைநிறுத்தத்திற்கு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    இஸ்ரேல்
    ஹமாஸ்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    இஸ்ரேல்

    பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினை சேர்ந்த 12 பேர் பலி  ரிஷி சுனக்
    இஸ்ரேல் நாட்டின் தூதரை சந்தித்து பேசினார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்  இந்தியா
    எரிபொருள் பற்றாக்குறை எதிரொலி- காசாவில் உள்ள ஐநா அமைப்பு சில மணி நேரங்களில் மூடப்படலாம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஹமாஸ்

    ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது? இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள் இஸ்ரேல்
    அமெரிக்கா விசாவில் இஸ்ரேலியர்களுக்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது விசா
    ரஃபா எல்லையை பார்வையிட்டார் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ஐநா சபை

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்? இஸ்ரேல்
    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலுக்கு, இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடு தான் காரணம்: அமெரிக்க அதிபர்  ஹமாஸ்
    சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா தாக்குதல் இஸ்ரேல்
    "போர் நிறுத்தம் செய்யப்படும் வரை பிணையக்கைதிகளை விடுவிக்க மாட்டோம்": ஹமாஸ் இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025