NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / நெகிழி மாசுபாட்டைக் குறைக்க புதிய வழிமுறைகள்.. ஐநா அறிக்கை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    நெகிழி மாசுபாட்டைக் குறைக்க புதிய வழிமுறைகள்.. ஐநா அறிக்கை!
    நெகிழி மாசுபாட்டைக் குறைக்க ஐநாவின் புதிய திட்டம்

    நெகிழி மாசுபாட்டைக் குறைக்க புதிய வழிமுறைகள்.. ஐநா அறிக்கை!

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 17, 2023
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகில் நெகிழி மாசுபாட்டைக் (Plastic Pollution) குறைப்பதற்கான புதிய திட்டங்கள் சிலவற்றை தங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது ஐநா. அதனைப் பின்பற்றுவதன் மூலம் 2040-ம் ஆண்டிற்குள் 80% வரை நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா.

    இந்த இலக்கை அடைவதற்கு உலக நாடுகளும், நெகிழி தொழில்துறையும் தங்களுடைய கொள்கைகளிலும், நடவடிக்கைகளிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஆழ்கடல் தொடங்கி உயரமான மலை வரை, காற்றில் கூட நுண்துகள்களாக நெகிழி கலந்திருக்கிறது.

    உலகில் உருவாக்கப்படு நெகிழிப் பொருட்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைவான வாழ்நாளைக் கொண்டவையாக இருக்கிறது. மேலும், விரைவாகவே அவை குப்பையில் சேர்கின்றன.

    இந்தப் பிரச்சினைகளை எல்லாம் ஓரளவு தீர்க்க தங்களுடைய அறிக்கையில் சில வழிமுறைகளைக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா.

    ஐநா

    என்ன வழிமுறைகள்? 

    மறுபயன்பாடு, மறுசுழற்சி மற்றும் மறுசீரமைப்பு என மூன்று திட்டங்களைக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா அமைப்பு.

    தண்ணீர்க் குப்பி உள்ளிட்ட மீண்டும் பயன்படுத்த முடிந்த வகையிலான நெகிழிப் பொருட்களை மறுபயன்பாடு செய்வதன் மூலம் 2040-ம் ஆண்டிற்குள் 30% வரை நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும்.

    நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்குச் தேவையான வழிமுறைகளை அரசு வெளியிட்டு அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 20-50% வரை நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும்.

    குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்ட ஷாம்பு பாக்கெட்டுகள், காபித்தூள் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றில் நெகிழிக்குப் பதிலாக மக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் மேலும் 17% நெகிழி மாசுபாட்டைக் குறைக்க முடியும்.

    இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் 7,00,000 புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறது ஐநா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐநா சபை
    కాలుష్యం

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை அமெரிக்கா
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா

    కాలుష్యం

    பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய அப்டேட்டை வெளியிட்டது ஹூண்டாய்! ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025