NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 24 மணிநேர கெடு: 11 லட்சம் காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    24 மணிநேர கெடு: 11 லட்சம் காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
    காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் இஸ்ரேல் காஸாவுக்கு உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை துண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    24 மணிநேர கெடு: 11 லட்சம் காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

    எழுதியவர் Srinath r
    Oct 13, 2023
    12:39 pm

    செய்தி முன்னோட்டம்

    காஸா பகுதிக்கு வடக்கில் வாழும் அனைவரையும் தெற்கு நோக்கி, 24 மணி நேரத்தில் வெளியேற, இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளதாக ஐநா சபை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    ஐநா சபை அளித்துள்ள தகவலின் படி, வடக்கு காசா பகுதியில், காஸா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், சுமார் 11 லட்சம் பேர் வாழ்வதாக தெரிவித்துள்ளது.

    இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐநா சபை, "மிகப்பெரிய மனித இழப்புகள் ஏற்படாமல், அத்தகைய இடம் பெயர்தல் சாத்தியமில்லை என ஐநா கருதுகிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இஸ்ரேல் அரசு, காஸாவில் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இஸ்ரேலிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    2nd card

    வெளியேற்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தும் ஐநா

    ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேல் அரசின் இந்த உத்தரவு உண்மையானதாக இருந்தால், அது ஏற்கனவே மோசமாக உள்ள சூழ்நிலையை பேரழிவாக்கும். அதனால் அத்தகைய உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.

    காஸாவில் உள்ள ஐநா அதிகாரிகளிடம் இஸ்ரேல் ராணுவத்தின் தொடர்பு அதிகாரிகள் இந்த உத்தரவு குறித்து எடுத்துரைத்தனர்.

    மேலும் அந்த உத்தரவில் ஐநாவின் பள்ளிகள், சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் அடைக்கலம் பெற்ற நபர்களும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

    3rd card

    ஐநாவின் அறிக்கையை கண்டித்துள்ள இஸ்ரேல் தூதர்

    வெளியேற்ற உத்தரவுக்கு எதிரான ஐநாவின் அறிக்கையை, இஸ்ரேல் தூதர் கண்டித்துள்ளார். ஐநாவின் அறிக்கை 'அவமானகரமானது' எனவும் சாடியுள்ளார்.

    இது குறித்து இஸ்ரேலுக்கான ஐநா தூதர் கிலாட் எர்டன் கூறுகையில், இந்த வெளியேற்ற உத்தரவு, ஒரு முன்னெச்சரிக்கை எனவும், போரில் தொடர்பில்லாத நபர்கள் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்படுவது இதன் மூலம் தடுக்கப்படும் எனவும் கூறினார்.

    மேலும் அவர், "பல ஆண்டுகளாக ஹமாஸ் ஆயுதங்கள் பெறுவதையும், காஸாவில் உள்ள மக்களையும், அவர்களது வீடுகளையும் மறைவிடமாக பயன்படுத்தி வருவதையும் ஐநா கண்டும் காணாமல் இருந்து வந்தது."

    "தற்போது ஹமாஸ் தீவிரவாதிகளால் தாக்கப்படும் இஸ்ரேல் பக்கம் நிற்பதை விட்டுவிட்டு, இஸ்ரேலுக்கு ஐநா பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது" என கண்டித்தார்.

    4th card

    காஸா மக்களை வெளியேற நேரடியாக உத்தரவிட்ட இஸ்ரேல் ராணுவம்

    தற்போது இஸ்ரேல் ராணுவம். காஸா மக்கள் வெளியேற நேரடியாக உத்தரவிட்டுள்ளது.

    அந்த உத்தரவில், "உங்கள் பாதுகாப்புக்காகவும், உங்கள் குடும்பங்களின் பாதுகாப்பிற்காகவும், உங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஹமாஸ் பயங்கரவாதிகளிடமிருந்து நீங்கள் விலகி இருங்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும் அதில், "வரக்கூடிய நாட்களில் ஐடிஎப்(இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்) காஸா பகுதியில் தாக்குதல் நடத்தும். அதேசமயம் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க விரிவான முயற்சிகள் எடுக்கப்படும்" எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

    ட்விட்டர் அஞ்சல்

    இஸ்ரேல் காஸாவில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    Take note of where Israel is focusing its air campaign. Densely populated areas, close to hospitals and most notably, the border crossing at Rafah. pic.twitter.com/SEECCgnesq

    — DD Geopolitics (@DD_Geopolitics) October 13, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐநா சபை
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை அமெரிக்கா
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா

    இஸ்ரேல்

    இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது? பிரதமர்
    பதுங்கு குழிகளில் தஞ்சம் அடையும் இஸ்ரேல் வாழ் மலையாளிகள் தீவிரவாதம்
    'இது 9/11 பயங்கரவாத தாக்குதலை போன்றது': ஐநா சபைக்கான இஸ்ரேலிய தூதர் பேச்சு ஐநா சபை
    இஸ்ரேலின் 'அயன் டோம்' அமைப்பை ஹமாஸ் எவ்வாறு ஊடுருவியது?  தீவிரவாதம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்
    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025