NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு
    பணைய கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலம் வரை நடை பயணம் மேற்கொண்டனர்.

    அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள் பத்திரமாக மீட்பு

    எழுதியவர் Srinath r
    Nov 20, 2023
    09:37 am

    செய்தி முன்னோட்டம்

    சுற்றி வளைக்கப்பட்ட காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து 31 பச்சிளம் குழந்தைகள், மீட்பு பணிகள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    தெற்கு காசாவில் உள்ள அல்-ஹெலால் அல்-எமராட்டி மகப்பேறு மருத்துவமனையில், மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

    "துரதிர்ஷ்டவசமாக, குழந்தைகள் யாரும் குடும்ப உறுப்பினர்களுடன் வரவில்லை. சுகாதார அமைச்சகத்திடம் போதுமான தரவுகள் இல்லாததால் குழந்தைகளின் உறவினர்களை கண்டறிய முடியவில்லை" என ஐநா அமைப்பு கூறுகிறது.

    அனைத்து குழந்தைகளும் கடுமையான தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11 பேர் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், மீட்பு பணிகள் தொடங்குவதற்கு முந்தைய இரவு, இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.

    2nd card

    பணைய கைதிகள் காசா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாசின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் மூண்டது.

    ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழித்தொழிக்கும் வரை ஓயமாட்டோம் என கூறிய இஸ்ரேல், காசா பகுதிக்குள் தரைவழி தாக்குதலை தீவிர்படுத்தி உள்ளது.

    காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனையை, ஹமாஸ் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது பணைய கைதிகள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது.

    இருப்பினும், அந்த வீடியோக்களின் உண்மை தன்மையை பெரும்பான்மையான செய்தி நிறுவனங்கள் தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.

    இந்நிலையில், இஸ்ரேலின் தரைவழி தாக்குதலில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 13,000யை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    3rd card

    எட்டி விடும் தூரத்தில் பணையக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான ஒப்பந்தம் 

    அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர், 240க்கும் மேற்பட்டோரை பணைய கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    அதில் தற்போது வரை, இரண்டு இஸ்ரேலிகள், இரண்டு அமெரிக்கர்கள் என நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேல் தாக்குதலில், 40 பணைய கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவிற்கான இஸ்ரேலின் தூதர் மைக்கேல் ஹெர்சாக், "வரவிருக்கும் நாட்களில்" ஒரு "குறிப்பிடத்தக்க எண்ணிக்கை" பணையக் கைதிகள் விடுவிக்கப்படலாம் என்று அவர் நம்புவதாகக் கூறினார்.

    பணையக் கைதிகள் விடுதலையில் மத்தியஸ்தம் செய்து வரும் கத்தார் அரசும், அவர்கள் விடுவிக்கப்படுவதற்கான ஒப்பந்தம் எட்டுவிடும் தூரத்தில் இருப்பதாக கூறியுள்ளது.

    இருப்பினும், இந்த ஒப்பந்தம் குறித்த தகவல்களை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காசா
    உலக சுகாதார நிறுவனம்
    ஐநா சபை
    அமெரிக்கா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காசா

    காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு குறித்து பிரதமர் மோடி கண்டனம் மருத்துவமனை
    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'மனிதாபிமான அடிப்படையில் காசாவுக்கு தொடர்ந்து உதவுவோம்' - ஐநா.,வில் இந்தியா அறிவிப்பு இந்தியா
    இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை இஸ்ரேல்

    உலக சுகாதார நிறுவனம்

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள் உலகம்
    மார்பர்க் வைரஸ் என்றால் என்ன: மார்பர்க் பெரும் பரவலை அறிவித்த WHO உலக செய்திகள்
    உலக செவித்திறன் தினம் 2023: காது கேளாமையை தவிர்க்க சில முன்னெச்சரிக்கை வழிகள் மருத்துவ ஆராய்ச்சி
    தேசிய தடுப்பூசி தினம் 2023: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம் இந்தியா

    ஐநா சபை

    சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் தன் தம்பியை பாதுகாத்த 7 வயது சிறுமி உலக செய்திகள்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் உலக செய்திகள்
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை உலகம்
    மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத்தள்ளிய இந்தியா - ஐ.நா அறிக்கை  இந்தியா

    அமெரிக்கா

    காசா மக்களுக்கு "உண்மையான எதிர்காலம்" வழங்குவதாக இஸ்ரேல் பிரதமர் உறுதி காசா
    'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க்  வணிகம்
    ஓரே ஆண்டில் ரூ.23 லட்சம் சம்பாதித்த அமெரிக்க ஊபர் ஓட்டுநர் உலகம்
    காசாவை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்த அமெரிக்கா இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025