Loading...
"நேருக்கு நேர் மோதல் கிடையாது!" ஆசிய விளையாட்டில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; வெளியான புதிய அறிவிப்பு
ஆசிய விளையாட்டுப் போட்டி 2026 தொடரில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் மோதலில் அதிரடி மாற்றம்

"நேருக்கு நேர் மோதல் கிடையாது!" ஆசிய விளையாட்டில் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; வெளியான புதிய அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 13, 2026
11:12 am

செய்தி முன்னோட்டம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026ல் இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க மோதல்கள் குறித்து உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானின் ஐச்சி-நாகோயாவில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில், இரு அணிகளும் வழக்கம் போல் ஒரே லீக் பிரிவில் இடம்பெறாமல் நேரடியாகக் காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்த வழக்கத்திற்கு மாறான புதிய போட்டி அட்டவணையின் காரணமாக, இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் வாய்ப்பு முற்றிலும் இல்லாது போயுள்ளது.

காலிறுதி

நேரடியாக காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள்

ஆடவர்கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் ஆகிய நான்கு முதன்மை அணிகளும் தரவரிசை அடிப்படையில் நேரடியாக காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.

அதேவேளையில் ஆப்கானிஸ்தான், ஜப்பான், நேபாளம், ஹாங்காங், மலேசியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளின் அணிகள் லீக் சுற்றில் மோதி காலிறுதிக்கு முன்னேறப் போராடும்.

இந்தியா காலிறுதி 2லும், பாகிஸ்தான் காலிறுதி 1லும் விளையாட உள்ளதால், இவை இரண்டும் வேறு வேறு அரையிறுதி பாதைகளில் பயணிக்கின்றன.

இதன் காரணமாக இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மட்டுமே மோதக் கூடிய அரிய சூழல் உருவாகியுள்ளது.

நேருக்கு நேர்

பதக்கத்திற்கான போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர்

இந்தத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்வது உறுதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளும் தங்களது காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தங்கம் அல்லது வெள்ளிக்கான இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதும்.

மாறாக, இரு அணிகளும் அரையிறுதியில் தோல்வியடைந்தால் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால், ஏதேனும் ஒரு அணி அரையிறுதியில் தோற்று மற்றொரு அணி வெற்றி பெற்றால், இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை ரசிகர்கள் பார்க்கவே முடியாத நிலை உருவாகும்.

ADVERTISEMENT

மகளிர் கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட் தொடரிலும் இதே நிலைப்பாடு

மகளிர் கிரிக்கெட் தொடரிலும் இதே போன்ற போட்டி அட்டவணை தான் பின்பற்றப்படுகிறது.

முதல் தரவரிசையில் உள்ள இந்தியப் பெண்கள் அணி காலிறுதியில் ஜப்பானை எதிர்கொள்கிறது, அதேவேளையில் பாகிஸ்தான் அணி தாய்லாந்தை சந்திக்கிறது.

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால் வங்காளதேசம் அல்லது ஹாங்காங் அணியையும், பாகிஸ்தான் முன்னேறினால் இலங்கை அல்லது மலேசிய அணியையும் எதிர்கொள்ளும்.

இதிலும் இரு அணிகளும் பதக்கத்திற்கான போட்டிகளில் மட்டுமே மோத முடியும் என்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பையும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT